தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ள நிவாரணம்

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து வந்ததன் காரணமாக கடந்த வாரம் முழுவதும் கனமழை பெய்து ஓய்ந்திருக்கிறது. இதற்கிடையில் அந்தமான் பகுதியில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனுடன் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை – எந்தெந்த இடங்களில் தெரியுமா? கலெக்டரின் அறிவிப்பு!

அதே போல பிச்சன் கோட்டகம் தென்பாதி மேலமருதூர் பகுதிகளிலும் உள்ள வயல் நிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டு வருகிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்துள்ள கனமழையினால் ஏகப்பட்ட பயிர் நிலங்கள் சேதமடைந்துள்ளது. அதனால் ஒவ்வொரு ஏக்கருக்கும் ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்.

அதே நேரத்தில் தடை காலங்களில் கடலுக்கு செல்லாத மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை போல விவசாய குடும்பங்களுக்கும் ரூ.10,000 உதவித்தொகையாக வழங்க வேண்டும். மேலும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சரி செய்து கான்கிரீட் வீடுகளாக கட்டி தர வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் சாலை அமைத்தல், வளவனாறு சுத்தம் செய்தல் மற்றும் கட்டுதல் ஆகியவற்றுக்கு பல கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் தள்ளிவைப்பு?

ஆனால் ஒரு மழைக்கே இந்த கரைகள் எல்லாம் உடைந்து வெள்ளப்பெருக்கு அபாயம் உருவாகி இருக்கிறது. அதனால் இந்த வளவனாற்று கரையை சரி செய்யும் பணியில் அரசு ஈடுபட வேண்டும்’ என கூறியுள்ளார். இந்த பேட்டியின் போது விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பெரியசாமி, கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!