2 ஆண்டுகளுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறைவு – தேர்தல் காரணமா?

0

2 ஆண்டுகளுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறைவு – தேர்தல் காரணமா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த பெட்ரோல் டீசல் விலை ரூபாய் இரண்டு குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு:

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு தற்போது வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மார்ச் 8 மகளிர் தினத்தன்று சமையல் எரிவாயு விலை ரூபாய் 100 குறைக்கப்பட்டது. அதாவது சமையல் எரிவாயு விலை ரூபாய் 818 க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக அதாவது 663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இந்த அறிவிப்பு தேர்தலை முன்னிட்டு வெளிவந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 102.63 விற்கப்பட்டது தற்போது 100.75 க்கு விற்பனை செய்யப்படுகிறது டீசல் ஒரு லிட்டர் 94. 24 விற்கப்பட்டது அதன் விலையும் ரூபாய் இரண்டு குறைக்கப்பட்டு 92.34 விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!