ஜம்மு காஷ்மீர் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் நல்வாழ்வை வலுப்படுத்தும் நோக்கில், பொது நிர்வாகத் துறை அகவிலைப்படி உயர்வை ஏற்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
DA உயர்வு:
லோக்சபா தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து மாதிரி நடத்தை விதிகள் அமலாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 1 2024 முதல் அடிப்படை ஊதியம் / அடிப்படை ஓய்வூதியத்தின் தற்போதைய ஊதிய விகிதத்தை 46%-த்தில் இருந்து 50% ஆக உயர்த்தும் நோக்கத்துடன், அகவிலைப்படி (DA) விகிதங்களில் குறிப்பிடத்தக்க திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் கெடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.
IOB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.50,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
காஷ்மீர் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் / குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் நல்வாழ்வை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட அகவிலைப்படி உயர்வு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பணியாளர் நலன்கள் மற்றும் அரசாங்க முயற்சிகளின் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.