மத்திய அரசு பெண் குழந்தைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புதிய திட்டம்
மத்திய மற்றும் மாநில அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில் மத்திய அரசின் கன்யா உத்தன்யோஜனா திட்டன் பெண் குழந்தைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் பெண்களுக்கு ரூ. 50000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்தில் சுமார் ஒன்றரை கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
TMB வங்கி வேலைவாய்ப்பு 2024 – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!
இன்னும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சேர மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இதுவரை சேர்ந்தவர்களுக்கு 1 முதல் 2 வயது வரை முதலில் ரூ.600ம், பின் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ. 700ம், 6 முதல் 8 ஆண்டுகள் வரை ரூ. 1000ம், 9 முதல் 12 வயது வரை ரூ. 1500ம் வழங்கப்படுகிறது. இந்த தொகை மொத்தமாக சேர்ந்து பட்டம் பெறும்போது ரூ.50000 ஆக வழங்கப்படும். ஆதார் அட்டை, பெண் குழந்தைகளின் பெற்றோரின் ஆதார் அட்டை, பெண் குழந்தைகளின் வங்கி பாஸ்புக், 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பெற்றோரின் மொபைல் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவை இந்த திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் ஆகும்.