சென்னையில் இன்று (ஏப்ரல் 5) பெட்ரோல் டீசல் விலை நிலவரம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் தற்போது விலை உயர்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலையின் இன்றைய நிலவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய நிலவரம்
தற்போது மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக பெட்ரோல் டீசல் அமைந்துவிட்டது. அந்த வகையில் தினமும் பெட்ரோல் டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனம் நிர்ணயம் செய்கிறது.
தமிழகத்தில் பரவும் கொரோனா – அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள்.. அமைச்சரின் பதில் என்ன?
அந்த வகையில் இன்று (ஏப்ரல் 5) பெட்ரோல் டீசல் விலை விவரம் வெளியாகி இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை கடந்த 318 நாட்களாக மாற்றம் இல்லாமல் இருந்து வரும் நிலையில், இன்றும் 319 நாளாக மாற்றம் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து விலையில் மாற்றம் இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தாலும், விலை குறைய வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.