![தமிழகத்தில் பரவும் கொரோனா – அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள்.. அமைச்சரின் பதில் என்ன? தமிழகத்தில் பரவும் கொரோனா – அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள்.. அமைச்சரின் பதில் என்ன?](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/04/தமிழகத்தில்-பரவும்-கொரோனா-அச்சத்தில்-ஆழ்ந்துள்ள-மக்கள்-768x576.jpg)
தமிழகத்தில் பரவும் கொரோனா – அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள்.. அமைச்சரின் பதில் என்ன?
தமிழகத்தில் திடீரென உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சற்று ஆறுதல் அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா பரவல் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 200 -க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை இருந்த தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அரசு மாநிலம் மீண்டும் ஒரு ஊரடங்கை சந்தித்து விடக்கூடாது என்ற நோக்கில் தடுப்பு பணிகளில் வேகம் காட்டி வருகிறது.
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை – தமிழகத்தில் யாருக்கெல்லாம் கிடையாது?
Follow our Instagram for more Latest Updates
திடீரென அதிகரிக்கும் பாதிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு தான் என்று கூறியுள்ளார்.
தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டால் 90 சதவீத மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். அதனால் கொரோனாவால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் உத்தரவையடுத்து 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக 7,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.