தமிழகத்தில் சலூன் கடைகள் திறக்க அனுமதி – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற ஜூன் மாதம் 21ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் புதிய தளர்வாக அழகு நிலையம், சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 14ம் தேதி முதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கடந்த முறை போல் தற்போதும் பாதிப்பு அதிகமாக காணப்படும் கோவை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு குறைவான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி – நேர கட்டுப்பாடுகள்!
அதேபோல் பாதிப்புகள் குறைவாக காணப்படும் மீதமுள்ள 27 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அழகு நிலையங்கள், சலூன் கடைகள் வருகிற ஜூன் 14ம் தேதி முதல் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் அழகு நிலையம் மற்றும் சலூன் கடைகள் இயங்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் இயங்கும்.
TN Job “FB Group” Join Now
மேலும் அழகு நிலையம் மற்றும் சலூன் கடைகளில் குளிர்சாதன வசதியுடன் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும். அரசு தெரிவித்துள்ள நிபந்தனைகளை முறையாக கடைபிடித்து கடைகள் செயல்பட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சுமார் ஒரு மாதங்களுக்கு பின்பு அழகு நிலையம், சலூன் கடைகள் இயங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.