தமிழகத்தில் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி – நேர கட்டுப்பாடுகள்!
தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய தளர்வாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள்:
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இதை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை சில தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவு பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 14ம் தேதி முதல் முடிவுக்கு வரும் நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 21ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜூன் 14 முதல் மாலை 5 மணிவரை கடைகளை திறக்க அனுமதி – மாநில அரசு முடிவு!
தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் ஜூன் 14ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாதிப்புகள் அதிகமாக காணப்படும் கோவை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது. சுமார் ஒரு மாத காலம் டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்த நிலையில் குறிப்பிட்ட 27 மாவட்டங்களில் பாதிப்புகள் குறைந்து வரும் காரணத்தால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி வழங்கியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.