மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி!
மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு விகிதத்தை ஆய்வு செய்த பின்னர், மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. தவிர 15 பேர் அனுமதியுடன் வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கேரளா மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து சில தளர்வுகளை அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் ஏறத்தாழ இரண்டு மாதங்கள் கழித்து கேரளாவில், புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 12 ஆயிரமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் பரிசோதனை செய்யப்படுவதில் ஏற்படும் பாதிப்பு வீதமும் 10 சதவீதமாக குறைந்துள்ளது.
பிளிப்கார்ட், அமேசான் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் – சலுகைகளுக்கு தடை?
அந்த வகையில் மாநிலம் முழுவதும் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ள முழு முடக்கத்துடன் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களிலும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கேரள அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி, மாநிலத்தில் 16%க்கும் குறைவான பாதிப்பு விகிதம் உள்ள இடங்களில் வழிபாட்டு மையங்கள் மீண்டும் திறக்கப்படும். இருப்பினும், 15 பேர் மட்டுமே வழிபாட்டு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் டெல்டா பிளஸ் கொரோனா வகை காணப்படும் மாவட்டங்களில் உடனடியாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், மேம்பட்ட சோதனை, கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Order full