பிளிப்கார்ட், அமேசான் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் – சலுகைகளுக்கு தடை?
இந்தியாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அதிக அளவில் இருந்து வருவதால் ரீடைல் வணிகர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக இ-காமர்ஸ் நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகளுக்கு தடை விதிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இ-காமர்ஸ் சலுகைகள்:
இந்தியாவில் தற்போது அதிக அளவு மக்கள் இ-காமர்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இ-காமர்ஸில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரு நிறுவனங்களும் மிக பிரபலமாக இருந்து வருகிறது. மேலும் இந்த இரு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பொருட்கள் அனைத்திற்கும் பல சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் பண்டிகை காலத்தில் பிளாஸ் சேல் என்ற பெயரில் அனைத்து பொருட்களையும் மிக குறைந்த அளவில் விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழக ரேசன் கடைகளில் ₹2000 & 14 வகை மளிகை பொருட்கள் – ஜூன் 25 க்குள் வழங்க உத்தரவு!
இ-காமர்ஸ் நிறுவனத்தின் இத்தகைய செயலால் ரீடைல் வணிகர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆன்லைனில் மிக குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதால் மக்கள் அனைவரும் ஆன்லைன் வணிகத்திற்கு அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தற்போது ரீடைல் வணிகர்களை பாதுகாக்கும் வகையில் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோக அமைச்சகம் உருவாகியுள்ள புதிய கொள்கை மாற்றத்தின் மூலம் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பிளாஸ் சேல் செய்ய தடை விதிக்கப்படவுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டம் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இ-காமர்ஸ் நிறுவனங்களால் ரீடைல் விற்பனையாளர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அரசு கடந்த 2 வருடங்களாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த செய்தி ஆன்லைன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.