தமிழக ரேசன் கடைகளில் ₹2000 & 14 வகை மளிகை பொருட்கள் – ஜூன் 25 க்குள் வழங்க உத்தரவு!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை வருகின்ற 25 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
25 ஆம் தேதிக்குள் பொருட்கள் விநியோகம் :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ரேஷன் கடைகள் மூலம் 4000 உதவி தொகை மற்றும் கொரோனா நிவாரண பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த உதவிதொகை 2 தவணைகளாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
OBC சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
அதன் படி மே மாத தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் தவணை இந்த மாதம் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் கொரோனா நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பானது வழங்கப்பட்டு வருகிறது.மே மாத தொகை வாங்காமல் விடுபட்டு போனவர்களுக்கு இந்த மாதம் வழங்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
சில இடங்களில் நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தாமதமாகிறது. இது தொடர்பாக மாநில உணவு பொருள் வழங்கல் துறையானது, அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான ரூ.2,000-த்தையும் வருகின்ற ஜூன் 25 ஆம் தேதிக்குள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.