தமிழக நீதிமன்றத்தில் ரூ.20,600/- ஊதியத்தில் வேலை – 10வது தேர்ச்சி போதும்..!
தமிழ்நாடு நீதித்துறை சேவையின் கீழ் பெரம்பலூர் நீதித்துறை பிரிவில் காலியாக உள்ள Steno Typist Gr -III & Typist பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்று முன்னதாக வெளியானது. அதில் இந்த Steno Typist Gr -III (7) & Typist (4) பணிகளுக்கு 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக நீதிமன்ற வேலைவாய்ப்பு விவரங்கள்:
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரகளின் குறைந்தபட்ச வயதானது 18 ஆகவும் அதிகபட்சம் 35 ஆகவும் இருக்க வேண்டும்
- Steno Typist Gr -III பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,600/- முதல் ரூ.65,500/- ஊதியம் வழங்கப்படவுள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- Typist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- ஊதியம் வழங்கப்படவுள்ளது.
- தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூரித்து செய்து அதனை 20.12.2021 அன்றுக்குள் முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர் என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.