தமிழகத்தில் அக். 18 முதல் ‘மக்கள் பள்ளி’ திட்டம் தொடக்கம் – மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் அக்.18ம் தேதி முதல் மக்கள் பள்ளி திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதில் தன்னார்வலர்கள் மூலம் பாடங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பள்ளி திட்டம்:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் நவம்பர் 1 முதல் 1 – 8 வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த அறிவிப்பிற்கு ஒரு புறம் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 3% DA & HRA அதிகரிப்பு! இம்மாதம் அமல்?
இந்த நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைப்பதற்கு மக்கள் பள்ளி என்ற திட்டம் வரும் 18ம் தேதி முதற்கட்டமாக கிருஷ்ணகிரி, நீலகிரி, விழுப்புரம், கடலூர், திருச்சி, திண்டுக்கல், காஞ்சிபுரம், தஞ்சாவூர், ஆகிய 8 மாவட்டங்களில் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டம் மூலம் கிராமபுற மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நவம்பர் 1 முதல் WhatsApp செயலி இயங்காது – ‘இந்த’ போன்களில் மட்டும்! பயனர்கள் அதிர்ச்சி!
பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு பள்ளி நேரத்துக்கு பிறகு அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு இடங்களில் தன்னார்வலர்கள் மூலம் செயல்முறை கற்பித்தல் வகுப்புகள் நடைபெறும். ஒரு தன்னார்வலர்கள் குறைந்தபட்சம் 1 – 20 மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவார். இந்த வகுப்பில் திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.