கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள குவியும் மக்கள் – பிரான்ஸ் அதிபரின் புதிய விதிகள்!!
பிரான்ஸ் நாட்டில் மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அந்நாட்டு அதிபர் புதிய விதிகளை அறிவித்துள்ளார். இதனால் அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்பதிவு செய்து வருகின்றனர்.
புதிய விதிகள்:
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொற்றின் இரண்டு அலைகள் முடிந்து சற்று ஓய்ந்திருக்கும் தற்போதைய நிலையில், தொடர்ந்து அடுத்த கட்ட பரவல் சிறிது நாட்கள் கழித்து அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் உலகம் முழுவதும் நாடுகள் அனைத்தும் தீவிர முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மாக்ரோன் மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதிய விதிகளை நாட்டில் அமல்படுத்தியுள்ளார். இந்த புதிய விதிகளின் மூலம் மக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்கின்றனர். சுகாதார அனுமதிச் சீட்டு இல்லாத பட்சத்தில் மக்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே சுகாதார அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் 9 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், செப்டம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து சுகாதார பணியாளர்களும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த வில்லை என்றால் கடும் விளைவுகள் இருக்கும் என்று கூறியுள்ளார் அதிபர். உணவகங்கள், சினிமா திரையரங்குகள் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கும் நீண்ட தூர ரயில் பயணங்கள், விமான பயணங்கள் மேற்கொள்வதற்கும் அனுமதிச் சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.