தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ள கல்லூரிகளை மீண்டுமாக திறப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் கொடுத்துள்ளார்.
கல்லூரிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து மாநிலம் முழுவதும் பல வகையான செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரிகளை அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனிடையே பல மாநிலங்களிலும் கொரோனா புதிய பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தமிழகத்திலும் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க வேண்டும் என அரசுக்கு பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.
facebook விடீயோக்களை மொபைலில் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரங்கள்!!
இதற்கிடையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகளை பொருத்தளவு கடந்த கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 1 முதல் புதிய மாணவர் சேர்க்கை பணிகள் துவங்க உள்ளது. இதை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு புதிய வகுப்புகள் துவங்கும் பட்சத்தில் அவர்களுக்கும் ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், தமிழகத்தில் கல்லூரிகளையும் மீண்டுமாக திறப்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் அளித்துள்ளார். இதற்கு முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பின்னர் அறிவிப்பார்’ என தெரிவித்துள்ளார்.