மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு – முதியோர் & விதவை ஓய்வூதியம் குறித்த முக்கிய முடிவு!
ஜார்கண்ட் மாநில அரசின் கீழ் செயல்பட்டு வரும் சிறப்பு பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
முதியோர் ஓய்வூதியம்:
தற்போது ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்ட உத்தரவுக்கு பிறகு, சர்வஜன் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் தகுதியான அனைத்து நபர்களையும் உள்ளடக்கும் திட்டத்தை அரசாங்கம் ஜூன் 8 முதல் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த நவம்பர் 2021ல் செயல்படுத்தப்பட்ட சர்வஜன் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து தகுதியான நபர்களும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படும் வகையில் இந்த திட்டங்களின் தகுதிகள் தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
8 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல் – தீவிரமடையும் கொரோனா பரவல்! அரசு அதிரடி உத்தரவு!
இந்த சர்வஜன் பென்ஷன் யோஜனா செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, மாநில திட்டத்தால் இயக்கப்படும் பல்வேறு ஓய்வூதிய திட்டங்களில் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 9,78,730 ஆக இருந்தது. இத்திட்டம் அமலுக்கு வந்த பிறகு, மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 13,76,225 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மொத்தம் 3,97,495 புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டப் பலன்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டுமாக தகுதியுடைய ஒவ்வொருவருக்கும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பலனை வழங்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அந்த வகையில் முதல்வர் உத்தரவின் பேரில் சர்வஜன் பென்ஷன் யோஜனா திட்டத்தில் தகுதியானவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக அந்தந்த தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடி மட்டத்திலும், ஊரகப் பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நகர்ப்புறங்களில் வட்ட அலுவலர் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வாக்காளர் மையங்களின் பட்டியல் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகளின் தகுதிகள் தொடர்பான படிவங்கள் இந்தக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் பி.எல்.ஓ., அங்கன்வாடி சேவிகா, சகாயிகா குழுவினர் ஆகியோர் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி, பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்களை இழந்த தகுதியுள்ள பயனாளிகளின் விவரங்களை பதிவு செய்து தேவையான ஆவணங்களை பெற்று சரிபார்ப்பு மேற்கொண்டுள்ளனர். இதனுடன், தகுதிவாய்ந்த பயனாளியிடம் தேவையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் பயனாளியிடம் இருந்து விண்ணப்பத்தைப் பெறும்போது, அதற்கான சான்றிதழை சிறப்பு பிரச்சார வடிவில் வழங்குவதை அவர்கள் உறுதி செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.