8 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல் – தீவிரமடையும் கொரோனா பரவல்! அரசு அதிரடி உத்தரவு!
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் அமலில் இருக்கும் கடுமையான ஊரடங்கு ஜூன் 1 முதல் தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவத் தொடங்கி உள்ளது. இதனால் 8 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என ஷாங்காய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீண்டும் ஊரடங்கு அமல்:
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீன அரசு ‘பூஜ்ய கொரோனா கொள்கை’ என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. அதாவது சீனாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதற்காக அந்நாட்டு அரசு தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறப்பு!
அந்த திட்டங்கள் பலன் அளித்த காரணத்தால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்தது.கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால், கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சீன அரசு ஆலோசித்து , ஷாங்காய் மாகாணத்தில் சுமார் 6 வாரங்களுக்கும் மேலாக அமலில் இருந்த ஊரடங்கை, ஜூன் 1 ஆம் தேதி முதல் தளர்த்தியது. மேலும் தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருந்தகங்கள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனையகம் உள்ளிட்டவற்றை முதலில் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் தற்போது மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இந்த வாரம் இறுதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என ஷாங்காய் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் Pudong, Huangpu, Jingan, Xuhui, Hongkou, Baoshan, Yangpu Minhang ஆகிய 8 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 15.3 மில்லியன் மக்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சீனாவில், நேற்று தனிமைப்படுத்தப்பட்ட மக்களிடையே 5 பேருக்கு நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே மில்லியன் கணக்கான மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலின் தீவிரத்தை பொறுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.