அரசு ஊழியர்களுக்கு பென்சன், பணிக்கொடை தொகை உயர்வு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

0
அரசு ஊழியர்களுக்கு பென்சன், பணிக்கொடை தொகை உயர்வு - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
அரசு ஊழியர்களுக்கு பென்சன், பணிக்கொடை தொகை உயர்வு - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
அரசு ஊழியர்களுக்கு பென்சன், பணிக்கொடை தொகை உயர்வு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை இமாச்சலப் பிரதேச மாநிலம் அறிவித்துள்ளது.

பென்ஷன் உயர்வு:

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு நிதி நெருக்கடி நிலையை அரசு எதிர்கொண்டு வந்தது. அதனை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. அத்துடன் 18 மாத நிலுவை தொகையும் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் – திருவண்ணாமலை CEO விடுவிப்பு!

இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த ஆண்டு மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார்கள். இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலும் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு தற்போது 31% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Airtel, Jio, Vi நிறுவனங்களின் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

இதனை தொடர்ந்து தற்போது இந்த ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவித்ததாவது, ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப பென்சன் பெறுபவருக்கு பென்ஷன் உயர்வு மற்றும் பணிக்கொடை தொகையில் உயர்வு வழங்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த பென்ஷன் உயர்வு பிப்ரவரி 1ம் தேதி முதல் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2016 ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து பணிக்கொடை தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போது 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உள்ளதாக இமாச்சலப் பிரதேச கேபினட் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!