தமிழகத்தில் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் – திருவண்ணாமலை CEO விடுவிப்பு!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த சம்பவத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக இன்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் எதிரொலியாக ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அண்மையில் ஊரடங்கில் தளர்வுகள் அளித்து அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட்டு 10ம் வகுப்பு மாணவா்களுக்கு முதல் திருப்புதல் தோ்வு பிப். 9 முதல் பிப்.15ம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 2 மாணவா்களுக்கு முதல் திருப்புதல் தோ்வு பிப்.9 முதல் பிப்.16-ஆம் தேதிவரை தோ்வு நடைபெறும் என 10 ,12 ம் வகுப்பு மாணவா்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியானது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள்!
இந்த கால அட்டவணை அடிப்படையில் பிப். 9 முதல் திருப்புதல் தேர்வு தொடங்கின. இந்த நிலையில் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் மாநிலம் முழுவதும் ஓரே மாதிரியாக இருப்பது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டு மாவட்ட அளவிலேயே வினாத்தாள்களை தயார் செய்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு அடிப்படையில் நேற்று (பிப்.14) நடைபெறவிருந்த பிளஸ் 2 கணிதத் தோ்வு, பத்தாம் வகுப்பு அறிவியல் தோ்வுக்கான வினாத்தாள்கள் செய்யாறு பகுதியில் சனிக்கிழமை அன்று வெளியானது. மேலும் அந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு வாட்ஸ்ஆப் வழியாக பத்தாம் வகுப்பு அறிவியல் தோ்வுக்கான வினாத்தாள்கள் பகிரப்பட்டது.
Airtel, Jio, Vi நிறுவனங்களின் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!
இந்த வினாத்தாள் வெளியானது குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கிளம்பியது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை குற்றம் செய்தவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. அந்த வகையில் ஆய்வு மேற்கொண்ட கல்வித்துறை செய்யாறு பகுதியில் இயங்கும் ஒரு தனியாா் பள்ளியில் இருந்து வினாத்தாள் வெளியானதை கண்டறிந்தது. இதனை தொடர்ந்து தேர்வுத்துறை இயக்குநர் நேற்று காலை விசாரணை மேற்கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். எனவே விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணப்பிரியாவை முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.