தமிழக அரசு பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை குறைவு – போக்குவரத்து துறை!
தமிழகத்தில் அரசு பேருந்து செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்து துறை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் பொதுமக்கள் முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள், திரையரங்குகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் 29 வது அறிவியல் மாநாடு – பள்ளி குழந்தைகளுக்கு அழைப்பு!
தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை குறைத்துள்ளனர். தற்போது தமிழக அரசு பெண்களுக்கான இலவச பேருந்து இயங்கி வருகிறது. இருந்தும் அரசு பேருந்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். மக்கள் தனியார் பேருந்துகளிலும் ரயில்களிலும் செல்வதாக கூறப்படுகிறது.
தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க வேண்டுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதனால் அரசு பேருந்தில் செல்பவர்களின் சராசரி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. 2011- 2012 ஆம் ஆண்டுகளில் அரசு பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை 2.08 கோடியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது 2020-21-ல் அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் தினசரி எண்ணிக்கை 73.64 லட்சமாக குறைந்துள்ளது என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் போக்குவரத்து துறை பெரும் நஷ்டமடையும் எனவும் கூறப்படுகிறது.