தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க வேண்டுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பட்டாசு கடைகள்:
தமிழகத்தில் மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. அன்று மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தும் விழாவை கொண்டாடுவது வழக்கம். பட்டாசுகள் இல்லாத தீபாவளி திருநாளை நினைத்து பார்ப்பது சற்று கடினமான ஒன்று. தற்போது தென்காசி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து வங்கிகள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
தென்காசி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளா்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.கோபாலசுந்தரராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆர்வமுள்ளவர்கள் 01.09.2021 முதல் 30.09.2021 வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையில் வரைபடம் மற்றும் கட்டடத்துக்கான புளு பிரிண்ட் வரைபடம், கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம், வாடகைக் கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிமத்தை காட்டும் ஆவணம், உரிமத்திற்கான கட்டணம் ரூ.500ஐ அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலான், இருப்பிடத்திற்கான ஆதாரமான ஆதார் அட்டை , வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் வரி ரசீது, புகைப்படம் 2 (பாஸ்போர்ட் அளவு) போன்ற ஆவணங்களை இணைக்க வேண்டும்.
Airtel குறைந்த விலையில் நிறைந்த பலன்கள் – ரீசார்ஜ் திட்ட விபரங்கள் இதோ!
செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் பெறப்படும் இணையதள விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த வழிமுறைகள் நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தல் வேண்டுவோருக்கு பொருந்தாது என்றும் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கோரியுள்ளார்.