மத்திய அரசின் 29 வது அறிவியல் மாநாடு – பள்ளி குழந்தைகளுக்கு அழைப்பு!
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் நடத்தப்படும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள குழந்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மாநாடு :
இந்தியாவில் மாணவர்களுக்கு அறிவியல் அறிவை வளர்க்கும் நோக்கில் பாட திட்டங்களை உருவாக்கி உள்ளது. எந்த ஒரு நிகழ்வும் அறிவியல் கண்ணோட்டத்துடன் காண வேண்டும் என்பதற்காகவும் உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை நேரடியாக காணும் வகையில் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வவ்போது பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தி மாணவர்களின் அறிவியல் அறிவை பறைசாற்ற வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க வேண்டுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மேலும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம் மற்றும் விபா நிறுவனம் இணைந்து தேசிய அறிவியல் திறனறித்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் 29 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறவுள்ளது. இந்தாண்டு நிலைப்புறு வாழ்க்கைக்கான வடிவமைப்பு மேம்பாடு மற்றும் முன்மாதிரி என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது. மேற்கண்ட தலைப்பில் உள்ளூர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு 2 மாதம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும்.
இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து வங்கிகள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
இந்த அறிவியல் மாநாட்டில் 2 மாணவர்கள் ஒரு வழிகாட்டி ஆசிரியருடன் குழுவாக ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இதில் பங்கேற்க விரும்பும் அனைத்து வகை பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் 94430 – 24086, 99440 – 95433 ஆகிய எண்களில் தொடர்பு விவரங்களை அறியலாம். மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.