Post Office கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
அஞ்சல் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் அக்கவுண்ட்-ஐ முடித்துக் கொள்ளும் போது கணக்கை புத்தகத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
அஞ்சல் துறை:
இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வங்கிகளை விட அதிக லாபம் அளிக்க கூடிய வகையில் வட்டியும் அளிக்கப்படுவதால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் கால அளவையும் அஞ்சலக திட்டங்கள் கொண்டுள்ளது. இதன் மூலம் அஞ்சலக திட்டத்தில் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் தொகை கிடைக்கும்.
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – இலவச பேருந்து சேவை!
இந்த நிலையில் வட்டி விகிதங்களுக்கு உரிய சான்றிதழ் அளிக்க கோரி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து பரிசீலிக்கப்பட்டு ஆண்டுதோறும் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு உதவும் வகையில் வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அஞ்சலக கணக்குதாரர்கள் அக்கவுண்ட் காலம் முடிவடையும் பொழுது தங்களது கணக்கு புத்தகத்தை கட்டாயம் அஞ்சல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு!
மேலும் கணக்கு முடிவு பெறும் போது அது குறித்த தகவலை சரிபார்த்து ‘கணக்கு நிறைவு அறிக்கை’ தயார் செய்யப்பட்டு, வாடிக்கையாளருக்கு பிரிண்ட் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கணக்கு புத்தகம் வேண்டும் என்றால் கணக்கு புத்தகத்தை நகல் எடுத்து கொடுக்கலாம். மேலும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் அக்கவுண்ட்-இல் பான் எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை இணைந்திருப்பது கட்டாயமாகும்.