அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் – வலுக்கும் கோரிக்கை!!
தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு பதவி மூப்பு மற்றும் நேர்காணல் தேர்வின் அடிப்படையில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் நீண்ட நாட்களாக தங்களின் பணி நிரந்தரமாக்கப்பட வேண்டும் என கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
பகுதி நேர ஆசிரியர்கள்
தமிழகத்தில் அரசு நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் கணினி, ஓவியம், உடற்கல்வி, தையல் ஆகிய பாடங்களைக் கற்றுத் தர அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். மேலும் கடந்த 2011ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, இவர்கள் வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் தேர்வு மூலமாகவும் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மாத சம்பளம் ரூ.10,000 மட்டுமே இவர்கள் பெற்று வருகின்றனர். இதையடுத்து பகுதி நேரமாக பணியாற்றும் தங்களை பணி நிரந்தரமாக்க வேண்டும் என தொடர்ந்து ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பாக ஆசிரியப் பெருமக்கள் அறவழியில் போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
2023ல் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா – பட்டியல் வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரமாக்கப்பட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.