தமிழக இலவச கட்டாயக்கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கை – பெற்றோர்கள் கோரிக்கை!!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறிப்பிட்ட அளவிலான அரசின் இலவச கட்டாயக்கல்வி திட்டத்திற்கான இடஒதுக்கீடு முறைப்படி மாணவர் சேர்க்கை தொடங்குவது பற்றி கோரிக்கை எழுந்துள்ளது.
கட்டாயக்கல்வி திட்டம்:
தமிழகத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் எட்டாம் வகுப்பு வரை கட்டாயமாக கல்வி அறிவை பெற வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் கட்டாயக்கல்வி என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கும் கல்வி கிடைக்கும் வகையில் தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட அளவிலான இடஒதுக்கீட்டில் மாணவர்கள் கட்டணமின்றி படிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? முதல்வர் இன்று ஆலோசனை!!
மாணவர் சேர்க்கை:
பொதுவாக தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜுன் மாதத்தில் தொடங்கும். தனியார் பள்ளிகளில் மார்ச் மாதம் முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் நடப்பு ஆண்டில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் காரணத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றது. இதனால் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கப்பட்டு விட்டது.
கட்டாயக்கல்வி திட்டம்:
பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் அரசின் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும். தற்போது உள்ள நிலையில் இந்த திட்டத்தில் மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படவில்லை. சிறுபான்மை அந்தஸ்து பெறாத தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு 20% இடங்கள் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்