தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? முதல்வர் இன்று ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல்வர் ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000க்கு மேல் பதிவாகி வருகிறது. மேலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இருந்த போதிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது சிரமம் என்பதால் பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி பல தரப்பில் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இதனால் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – உயர்கல்வித்துறை விளக்கம்!!
இந்த கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது அல்லது ரத்து செய்யப்படுவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போதைய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கலாமா அல்லது முழு ஊரடங்கிற்கு வாய்ப்புள்ளதா என ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்படும். இது குறித்த முடிவுகளை எடுக்க முதல்வருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.