தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று – அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மீண்டும் தீவிரமாகும் கொரோனா:
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைகள், ஹோட்டல்கள், திரையரங்குகள், பேருந்துகள் என அனைத்து விதமான பொது இடங்களிலும் மக்களுக்கு100% தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மக்கள் அனைவரும் உரிய கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையே கடைபிடிக்குமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
அதாவது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அனைத்தையும் முறையே கடைபிடிக்க தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. எனினும் கொரோனா தொற்று இன்னும் முற்றிலும் நம்மை விட்டு அகலவில்லை என்பது தான் உண்மை.
Vijay TV Big Boss Promo || மனம் விட்டு பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்த ப்ரியங்கா & தாமரை!!
ஆனால் கிராமப்புற மக்களிடையே கொரோனா தொற்று இனிமேல் பரவாது என்ற எண்ணம் வந்துவிட்டது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் உள்பட மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அதனால் அந்த பள்ளியில் பயிலும் இதர மாணவர்கள், ஆசிரியர்கள் மற்ற 3 பேருடைய குடும்பத்தார்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.