கண்ணனிற்கு சாப்பாடு கொடுத்து விடும் தனம், ஏற்றுக் கொள்வாரா மூர்த்தி? அடுத்த வார எபிசோட்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கண்ணன் சாப்பிடாமல் வீட்டிற்கு வந்ததால் தனம் இருவருக்கும் சாப்பாடு கொடுத்து அனுப்புகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், அம்மாவின் இறுதி காரியத்தை முடித்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு வந்து சாப்பிடுகின்றனர். அப்போது ஊர் பெரியவர், நாங்க எல்லாரும் சாப்பிட்டோம் நீயும் அஸ்தி கரைக்க போன சாப்பிட்டியா என கேட்க, கண்ணன் இல்லை என சொல்கிறார். உடனே அவர் கண்ணனை அழைத்து சாப்பிட உள்ளே கூட்டி செல்கிறார். அங்கே மூர்த்தி சாப்பிட அமர்ந்திருக்க கண்ணனுக்கு இலை போடுமாறு முல்லையிடம் சொல்கிறார் தனம்.
சன் டிவி ‘சித்தி 2’ சீரியலில் அறிமுகமாகும் விஜய் டிவி நடிகை – வெளியான புகைப்படம்!
முல்லை இலை போட மூர்த்தி உடனே எழுந்து விடுகிறார். இதனால் உடனே எழுந்த கண்ணன் நீங்க உக்காருங்க நான் போறேன் என சொல்லி வீட்டிற்கு கிளம்புகிறார். இந்நிலையில் அடுத்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மூர்த்தி சாப்பிட அமர்ந்த போது எழுந்தது கவலையாக இருக்கிறது என ஐஸ்வர்யாவிடம் கண்ணன் சொல்லி வருத்தப்படுகிறார். அப்போது தனம் சாப்பாடு கொடுத்து விட்டதாக சொல்லி ஒருவர் சாப்பாடு கொண்டு வந்து தருகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவை பிரிந்து வாடும் கண்ணன் – மனம் திறந்து பேட்டி!
அதை பார்த்ததும் கண்ணனுக்கு சந்தோசமாக இருக்கிறது. கண்ணனும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து சாப்பிடுகின்றனர். இதை கேட்டதும் கண்ணனுக்கு நம்பிக்கை வருகிறது. மேலும் இன்றைய எபிசோடில் மூர்த்தியும் கண்ணனிடம் இப்படி நடந்து கொண்டதை நினைத்து கதிர், ஜீவாவிடம் வருத்தப்படுகிறார். நீங்களும் அவனை போல எதுவும் இப்படி செய்து என்னை விட்டு போகாதீங்க என்னால் அதை தாங்கவே முடியவில்லை என சொல்லி அழுகிறார்.