சன் டிவி ‘சித்தி 2’ சீரியலில் அறிமுகமாகும் விஜய் டிவி நடிகை – வெளியான புகைப்படம்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சித்தி 2’ சீரியலில் சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சீரியலை விட்டு விலகிய நிலையில், அவருக்கு பதிலாக உஷா எலிசபெத் என்பவர் தற்போது நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீரியல் நடிகை
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சித்தி’ என்ற சூப்பர் ஹிட் சீரியலின் 2ஆவது பாகமான ‘சித்தி 2’ சீரியல் பல புதிய முகங்களுடன் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. அதன் ஒன்றாம் பாகத்தை போலவே 2ம் பாகத்தில் பிரபல தமிழ் சினிமா நடிகை ராதிகா, சித்தி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வர அவரை சுற்றி கதைப்பின்னணி அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் சீரியல் துவங்கிய சில மாதங்களிலேயே நடிகை ராதிகா சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவை பிரிந்து வாடும் கண்ணன் – மனம் திறந்து பேட்டி!
ராதிகாவின் இந்த விலகளுக்கு பிறகு, சித்தி 2 கதைக்களம் வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்தது. அதாவது கவின், வெண்பா திருமணம், வீட்டை விட்டு வெளியேறுதல், யாழினியின் வில்லத்தனம் என சித்தி 2 சீரியல் தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் கவின் கதாபாத்திரத்தில் நந்தன் மற்றும் வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை ப்ரீத்தி ஷர்மா நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் சமீபத்தில் சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது கவின் மற்றும் வெண்பா இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் சுப்புலட்சுமி என்பவரது வீட்டில் வேலை செய்து வருகின்றனர்.
8 வருடங்களுக்கு பிறகு தொடங்கும் “பாரதி கண்ணம்மா சீசன் 2” – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் ‘சித்தி 2’ சீரியல் கதையில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை அந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தேன்மொழி BA’ சீரியலில் சித்தார்த்துக்கு அம்மாவாக நடித்திருந்த நடிகை உஷா எலிசபெத் ‘சித்தி 2’வில் களமிறங்க இருக்கிறார். அந்த வகையில் சித்தி 2 படப்பிடிப்பு தளத்தில் ப்ரீத்தி ஷர்மா மற்றும் உஷா எலிசபெத் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.