‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவை பிரிந்து வாடும் கண்ணன் – மனம் திறந்து பேட்டி!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், விஜே தீபிகா மாற்றப்பட்டது சேனல் எடுத்த முடிவு என கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் தெரிவித்துள்ளார். மேலும் தீபிகாவை ஒரு தோழியாக மிஸ் பண்ணுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவி பிரபலமான சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில், விஜே தீபிகா மாற்றப்பட்டதற்கு கண்ணனாக நடித்த சரவண விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் முகப்பரு காரணமாக விஜே தீபிகா மாற்றப்பட்டது சேனல் எடுத்த முடிவு, ரசிகர்கள் அதை பற்றி என்ன நினைக்கிறார்கள் என கொஞ்சம் யோசித்திருக்கலாம் என சொல்கின்றனர். அதுவும் அம்மா இறந்து இறுதி சடங்கு காட்சிகளில் மாற்றப்பட்டது என்பது திடீரென எடுத்த முடிவாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
8 வருடங்களுக்கு பிறகு தொடங்கும் “பாரதி கண்ணம்மா சீசன் 2” – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
படப்பிடிப்பு தளத்தில் அண்ணன், அண்ணி என நடித்துக் கொண்டிருக்கும் போது இவள் மட்டும் என்னுடைய வயதில் இருப்பதால் கலகலப்பாக இருக்கும். அதை தான் மிஸ் செய்வதாக தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சாய் காயத்ரி பற்றி கேட்டதற்கு அவரை ஈரமான ரோஜா நாடகத்தில் பார்த்திருக்கேன். அவர் நல்ல நடிகை, அது தவிர எதுவும் நான் பேசியதில்லை என தெரிவித்தார். தீபிகா சென்றதால் அழுதீர்களா என கேட்டதற்கு கவலைப்பட்டேன் ஆனால் அழுகவில்லை என தெரிவித்தார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவிற்கு பதில் புது நடிகர் அறிமுகம் – ‘ரோஜா’ சீரியலில் நியூ என்ட்ரி!
அவர் நீங்க கண் கலங்கியதாக சொன்னாரே என கேட்டதற்கு அவருக்கு சரியாக கண்ணு தெரியாது. அதனால் கூட இருக்கலாம் என நகைச்சுவையாக தெரிவித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க அழகு தேவையில்லை திறமை தான் தேவை, ஆனால் கதாபாத்திரத்திற்கு போல இப்படி இருக்க வேண்டும் என்பதால் தான் அவர்கள் அந்த முடிவை எடுத்திருக்கலாம், ஆனால் அவர் நன்றாக நடித்தார். இந்த முடிவு சேனல் எடுத்தது என தெரிவித்துள்ளார்.