“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கடைசி மருமகள் ஐஸ்வர்யா மீது பொறாமைப்படும் மீனா – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அண்ணன் தம்பிகள் அவர்களுடைய மனைவிகள் சந்தோசமாக இருந்து வரும் நிலையில் ஐஸ்வர்யாவை பார்த்து மீனா பொறாமைப்படுகிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சந்தோசமாக பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தனம் குழந்தை பெற்றது முதல் அவர் மீது மீனாவிற்கு வருத்தம் இருக்கிறது. இனிமேல் கயலை அவர் பார்க்க மாட்டார். அவருடைய குழந்தையை தான் கவனித்து கொள்வார் என பல தடவை கோவமாக பேசி இருக்கிறார். இருந்தாலும் கயல் பிறந்தநாள் அன்று தனம் மூர்த்தி கயலிற்கு நகை போட்டதும், கயல் பெயரில் ஆர்டி திறந்திருப்பதும் தெரிந்து மீனா சந்தோசப்படுகிறார்.
Vijay TV Bigg Boss 5 Promo 2 | குழந்தை போல அம்மாவை பார்த்து அழுத பிரியங்கா!
மறுபக்கம் முல்லை குழந்தை இல்லை என வருத்தமாக இருக்கிறார். தினமும் கதிரிடம் சொல்லாத நாளில்லை. மேலும் குடும்பத்தின் பெரிய பிரச்சனையாக இருந்த கண்ணன் தற்போது குடும்பத்துடன் சேர்ந்து விட்டார். ஐஸ்வர்யா குடும்பத்தினரை ஈர்க்க எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். அதை பார்த்த தனம் இப்போ வந்தவள் எல்லா வேலைகளையும் செய்கிறாள். ஆனால் நீ ஒன்றுமே செய்யமாட்ட என எதார்த்தமாக சொல்ல, அதை நினைத்து மீனாவிற்கு கோவம் வருகிறது.
விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுத்த முகேன் ராவ், கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் – ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் மீனா புதிதாக கல்யாணம் முடிந்து வரும் போது நைட்டி போட கூடாது என லட்சுமி அம்மா சொல்ல அவரும் திருத்தி கொண்டார். ஆனால் இப்போது புதிதாக வந்த ஐஸ்வர்யா நைட்டி போட்டு வர அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கண்ணன் தனியாக அழைத்து இந்த நைட்டி எல்லாம் போடாதே என சொல்ல, அதை கேட்காமல் ஐஸ்வர்யா இருக்கிறார். மீனா பின் தனியாக கூப்பிட்டு இந்த வீட்டில் நைட்டி போட கூடாது என ரூல்ஸ் இருப்பதாக சொல்ல, ஐஸ்வர்யா போங்க அக்கா என சிரித்துக் கொண்டே செல்கிறார். அதனால் மீனாவிற்கு பொறாமை வருகிறது.