வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன், மூர்த்தி மீது கோவப்படும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனை மூர்த்தி வெளியே போக சொன்னதை நினைத்து தனம் கோவமாக இருக்கிறார். பின் கதிர் கண்ணனை அடித்த அடியாட்களை அடித்ததை நினைத்து வருத்தப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனை மூர்த்தி வெளியே போக சொல்ல, தனம் அதை பார்த்து கோபப்படுகிறார். கோவமாக உள்ளே செல்ல, மீனா அக்கா கோவமாக இருக்காங்க என முல்லையிடம் சொல்கிறார். பின் அனைவரும் சாப்பிட உக்கார தனம் மற்றும் சாப்பிடாமல் இருக்கிறார். மூர்த்தி தனம் சாப்பிடவில்லையா என கேட்க, அக்கா கோவமாக இருக்காங்க என சொல்கிறார். மூர்த்தி தனத்தை கூப்பிட ஏன் சாப்பிட வரவில்லை என கேட்கிறார். எல்லாம் எனக்கு பிடித்தது போலவா நடக்கிறது என தனம் கோவப்பட, மூர்த்தி சாப்பிடாமல் செல்கிறார்.
பின் மீனா ஜீவாவிடம் தனம் அண்ணி இப்படி கோவப்படுவார்கள் என நினைக்கவில்லையே என்று சொல்கிறார். கண்ணன் அவங்க வீட்டில் இருப்பது தான் நல்லது என மீனா சொல்ல, நீ இந்த குடும்பத்திற்கு ஆதவராகவும் பேசுகிறாய் அப்பறம் இல்லை போலவும் பேசுகிறாய் என்று சொல்கிறார். ஆமாம் கண்ணன் அங்கே இருப்பது தான் அவனுக்கு நல்லது என சொல்கிறார். அப்பறம் இங்கே வந்தால் அவனுக்கு ரூம் இல்லை. நமக்கு தான் குழந்தை பிறந்து வளர்ந்துவிட்டது. அப்போ நம்ம ரூமை தான் சொல்வார்கள் என சொல்கிறார். சத்தியமா உன்னை போல யாரும் இருக்கமாட்டாங்க என ஜீவா கிண்டல் செய்கிறார்.
கதிர் முல்லை ரூமிற்கு வர கதிர் அண்ணி ஏன் இவ்வளவு கோவமாக இருக்காங்க என கேட்கிறார். அப்போது அவங்க நாளைக்கு சேர்ந்து கொள்வார்கள் என முல்லை சொல்ல, கதிர் கையில் காயம் இருப்பதை முல்லை பார்க்கிறார். சட்டையை கழட்டுங்க என முல்லை சொல்ல அங்கே அங்கே அடிபட்டு இருக்கிறது. அதை பார்த்து முல்லை என்ன இது என கேட்க, வண்டியில் வரும் போது நான் கிழே விழுந்துட்டேன் என சொல்கிறார். பொய் சொல்லாதீங்க இது யாரோ அடித்தது போல இருக்கிறது உண்மையை சொல்லுங்க என சொல்ல, கண்ணனை அடித்தவனை நான் அடித்தேன் என சொல்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ரோஷினி விலகியதற்கான உண்மையான காரணம் – ரசிகர்கள் ஷாக்!
உடனே முல்லை சத்தம் போட்டு உங்களுக்கு எதற்கு தேவையில்லாத வேலை என சொல்கிறார். பின் முல்லை இனிமேல் சண்டைக்கு போக மாட்டேன் என சத்தியம் செய்து கொடுக்க சொல்ல, கதிர் சத்தியம் செய்து கொடுக்கிறார். காயங்களுக்கு முல்லை மருந்து போட்டு விட அழுது கொண்டே முல்லை இருக்கிறார். தனம் ரூமில் இருக்க மூர்த்தி வந்து தனத்தை சாப்பிட்டியா என கேட்கிறார். பாதி சாப்பாட்டில் எழுந்து செல்வது எல்லாம் சரியில்லை என தனம் சொல்ல, மூர்த்தி நான் சாப்பிட்டியா என்று தான் கேட்டேன் என சொல்கிறார். நீங்க கண்ணனிடம் இவ்வளவு வெறுப்புடன் நடந்து கொள்வது சரி இல்லை என தனம் சொல்ல,நாம கண்டுகொள்ளாமல் இருப்பதால் தான் ரோடில் போறவன் எல்லாம் அவனை அடிப்பதாக சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.