குழந்தையை பார்க்க வரும் குடும்பத்தினர், கயலை ஒதுக்குவதாக நினைக்கும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் குழந்தையை பார்க்க மீனா அப்பா அம்மா, முல்லையின் அப்பா அம்மா என அனைவரும் வருகிறார்கள். பின் மீனா கயல் பாப்பாவை வீட்டில் இருப்பவர்கள் ஒதுக்கி வைப்பது போல நினைக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் குழந்தையை பார்க்க மீனாவின் அப்பா அம்மா வருகிறார். அவர்கள் குழந்தையை கொஞ்ச மீனா அப்பா பணம் வைத்து கொடுக்கிறார். அவர் கயலை கொஞ்சிவிட்டு கிளம்ப, முல்லையின் அப்பா அம்மா குழந்தையை பார்க்கிறார். அவர் குழந்தையை தூக்கி கொஞ்சிவிட்டு குழந்தைக்கு நகை போடுகிறார்கள். பின் தனம் போலவே பையன் இருக்கிறார் என சொல்ல கஸ்தூரி எவ்வளவு கலராக இருக்கிறான். கயலை விட கலர் என சொல்கிறார். உடனே மீனா வருத்தப்படுகிறார்.
பின் கஸ்தூரி கண்ணன் பற்றி முல்லை அம்மாவிடம் பேச, முல்லை வந்து நகை போடா காசு ஏது என கேட்கிறார். உடனே கஸ்தூரி மல்லி தான் அவ்வளவு பெரிய பணக்காரியாக இருக்கிறாள் அப்பறம் என்ன குறை என சொல்ல, முல்லையின் அம்மா அவளிடம் வாங்கி நகை போடுகிற அளவிற்கு நாங்க குறைந்து போகவில்லை என சொல்கிறார். உடனே கஸ்தூரி எல்லாரும் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் நீ எப்போ பெற்றுக் கொள்ள போகிறாய் என கேட்க, முல்லையின் அம்மாவும் அதே தான் கேட்கிறார்.
முதலில் மீனா குழந்தை பெற்றுக் கொண்டார். பின் தனம் அண்ணி மாசமாக இருந்தார். அதனால் தான் நான் திட்டமிடவில்லை என சொல்கிறார். உடனே அவர்கள் பெற்றால் என்ன உனக்கும் திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. நீயும் பெற்றுக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். அதெல்லாம் பார்த்துக்கலாம் என முல்லை சொல்கிறார். பின் குடும்பத்தில் அனைவரும் குழந்தையை கொஞ்ச, கதிர் குழந்தையை தூக்க தெரியாமல் இருக்கிறார்.
‘பிக் பாஸ்’ சீசன் 5 வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் ரவீந்தர்? ரசிகர்கள் அதிர்ச்சி!
உடனே தனம் தூக்கி பாரு என சொல்ல, அவர் தூக்கி அண்ணி போலவே இருப்பதாக சொல்கிறார். உடனே ஜீவா அண்ணன் போலவும் தான் இருக்கிறார் என சொல்ல, மூர்த்தி அம்மா போலவும் இருக்கிறார் என சொல்கிறார். உடனே குடும்பத்தில் அனைவரும் குழந்தையை நினைத்து சந்தோசமாக இருக்கிறார்கள். கயல் பற்றி பேசி குழந்தையை தூக்கினாள் கயலிற்கு கோவம் வருவதாக சொல்கிறார். கயல் தான் முதலில் பின்னர் தான் நீ என தனம் சொல்ல, மீனா கயலை ஒதுக்குவதாக கயலிடம் சொல்கிறார்.