கண்ணன் சாப்பிட உட்கார சாப்பிடாமல் எழுந்த மூர்த்தி, கண்ணனை நினைத்து கவலையில் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், காரியங்கள் முடிந்த பின்னர் அனைவரும் சாப்பிட அமருகின்றனர். அப்போது கண்ணன் வெளியே நிற்க ஊர் பெரியவர் சாப்பிட உள்ளே போக சொல்கிறார். கண்ணன் சாப்பிட உக்கார மூர்த்தி எழுந்துவிடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா வாழ்ந்து முடித்துவிட்டார்கள் எனவே அவங்களுக்கு போகணும் என்று தோன்றிவிட்டது. அதனால் தான் என முல்லையில் அம்மா சொல்கிறார். உடனே மீனா உண்மையாகவே கண்ணனை பார்த்துக்க சொல்லி சொன்னார்களா என கேட்க ஆமாம் என தனம் சொல்கிறார். அப்போ ஏன் அவனை அப்படி திட்டுனீங்க என கேட்க, அவன் செய்தது தப்பு அதுனால சில நாட்களுக்கு அவன் தனியாக இருந்தால் தான் சரியாக வரும் என முல்லையின் அம்மா சொல்கிறார்.
பின் காரியங்கள் முடிந்த பின்னர் சாப்பிட அமருகின்றனர். கண்ணன் வெளியே அமர சாப்பிட்டியா என ஊர் பெரியவர் கேட்கிறார். இல்லை என சொல்ல, கண்ணனை உள்ளே சென்று சாப்பிட சொல்கிறார். கண்ணன் உள்ளே சென்று மூர்த்தி அருகில் அமர உடனே மூர்த்தி எழுந்துவிடுகிறார். பின் கண்ணன் நீங்க சாப்பிடுங்க நான் எழுந்துவிடுகிறேன் என சொல்லி கண்ணன் அங்கிருந்து கிளம்புகிறார். ஐஸ்வர்யா இனிமேல் இங்கே நிற்க வேண்டாம் என சொல்ல அங்கிருந்து கண்ணன் கிளம்புகிறார்.
கண்ணம்மாவை பாரதியிடம் இருந்து விவாகரத்து வாங்க சொல்லும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
பின் மூர்த்தி ஜீவா கதிரை அழைத்து பேச, கண்ணன் செய்தது பெரிய தவறு அவன் அப்படி செய்யாமல் இருந்தால் நமது அம்மா இருந்திருப்பார். ஆனால் அவனை பார்த்தல் பாவமாக தான் இருக்கிறது ஆனால் என்னால் அவனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் சாப்பிட கூடாது என நான் எந்திரிக்கவில்லை. என்னால் அவன் அருகில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை என சொல்கிறார். என்ன இருந்தாலும் அவன் நம்ம கூட பிறந்த தம்பி தான அம்மா இறந்த சோகம் அவனுக்கும் இருக்கும் எல்லாம் எனக்கு புரிகிறது.
கணவரோடு அறந்தாங்கி நிஷா செய்திருக்கும் அட்ராசிட்டி – வெளியான வீடியோ!
ஆனால் என்னால் அவனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் அப்படி செய்யாமல் இருந்தால் அம்மா இருந்திருப்பார் என சொல்ல, எல்லாம் சீக்கிரத்தில் சரியாகி விடும் என கதிர் சொல்ல, என்ன பிரச்சனை இருந்தாலும் நாம குடும்பத்தை விட்டு அண்ணன் தம்பிகளை விட்டு போய்டாதீங்க என சொல்லி அழுகிறார். ஏன் இப்படி பேசுகிறாய் இனிமேல் இப்படி பேசாதீங்க என சொல்கிறார். கண்ணன் நமது குடும்பத்தை பற்றி நினைக்காமல் இப்படி போய்விட்டான் நீங்களும் அது போல செய்துவிடாதீங்க என சொல்லி வருத்தப்பட்டு அழுகிறார். அப்படி எல்லாம் யோசிக்காதிங்க என சொல்லி ஜீவா சொல்ல, அண்ணன் தம்பிகள் கையை பிடித்து ஆறுதல் தெரிவிக்கின்றனர்.