கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு வேலை தரும் ஜனார்த்தனன், பழைய நிலைக்கு திரும்பிய லட்சுமி அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு வேலை தரும் ஜனார்த்தனன், பழைய நிலைக்கு திரும்பிய லட்சுமி அம்மா - இன்றைய
கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு வேலை தரும் ஜனார்த்தனன், பழைய நிலைக்கு திரும்பிய லட்சுமி அம்மா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு வேலை தரும் ஜனார்த்தனன், பழைய நிலைக்கு திரும்பிய லட்சுமி அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை அழைத்து கல்லூரிக்கு சென்று கொண்டே வேலை பார்க்குமாறு ஜனார்த்தனன் வேலை தருகிறார். பிறகு மூர்த்திக்கு போன் செய்து தகவல் சொல்கிறார். லட்சுமி அம்மா உடல்நிலை சரியாகி மீண்டும் பழையபடி செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட்டுக்கு அழைக்கிறார். அப்போது ஐஸ்வர்யாவை உன்னை ஏமாத்தி கூட்டிக்கொண்டு வந்தன. நீ சொல்லு நான் உன் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என சொல்கிறார். நீயும் என் மகள் போல தான் என சொல்ல உடனே ஐஸ்வர்யா அப்படி எல்லாம் இல்லை எனக்காக இவருடைய குடும்பத்தை விட்டு வந்திருக்கார் நான் என்ன நடந்தாலும் இவரோடு தான் இருப்பேன் என சொல்கிறார்.

அதை கேட்ட ஜனார்த்தனன் இளம் ரத்தம் அப்படி தான் பேசும் என சொல்லிவிட்டு, சரி கல்யாணம் செய்துவிட்டீர்கள் அடுத்து சாப்பாட்டிற்கு என்ன செய்ய போறீங்க என கேட்கிறார். என் சூப்பர் மார்கெட்டிற்கு வேலைக்கு ஆள் தேவை நீங்க பாருங்க என சொல்கிறார். அதை கேட்டு கண்ணன் மகிழ்ச்சி அடைகிறார். பிறகு அதற்காக படிப்பை விட கூடாது கல்லூரி எத்தனை மணிக்கு முடியும் என கேட்கிறார். கண்ணன் 3 மணிக்கு என சொல்ல, அப்போ 3.15க்கு வேலை தொடங்கிறணும்.

அகிலை பிரிய மனமில்லாமல் கதறி அழும் அஞ்சலி, சொந்தக்காரர்கள் பற்றி கேட்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

இரவு 10.30க்கு கடை மூடிய பின்னர் தான் செல்ல வேண்டும் என சொல்கிறார். அதை கேட்ட கண்ணன் சரி என சொல்கிறார். உடனே ஐஸ்வர்யா எனக்கும் வேலை வேண்டும் என சொல்கிறார். என்ன வேலை பார்ப்பாய் என கேட்க எனக்கு கம்ப்யூட்டர் எல்லாம் தெரியும் பில்லிங் போட சொந்தக்கரவங்க தான வேலைக்கு வைப்பாங்க அதுனால நான் அந்த வேலை பார்க்கிறேன் என சொல்கிறார். ஜனார்த்தனன் சரி என சொல்கிறார். பின்னர் இருவரும் வெளியே வந்து மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

பின்னர் ஜீவா மீனா கதிர் முல்லை மூர்த்தி தனம் அமர்ந்து கணக்கு பார்த்து கொண்டிருக்கும் போது மீனா ரகசியமாக கண்ணன் வேலைக்கு சேர்ந்துவிட்டான் என சொல்கிறார். பின்னர் ஜீவா கதிரிடம் ரகசியமாக சொல்கின்றனர். அதன் பின்னர் மூர்த்தி என்ன என்று கேட்க அப்போது மாட்டிக் கொண்டோம் என மீனா முழிக்கிறார். அப்போது சரியாக போன் வருகிறது. மீனாவின் அப்பா பேசுகிறார். கண்ணனுக்கு வேலை கொடுத்த விஷயத்தையும், வீடு கொடுத்து தங்க வைத்த விஷயத்தையும் சொல்கிறார்.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,587 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

உங்களிடம் சொல்லாமல் செய்துவிட்டேன் என நினைக்க வேண்டாம் என சொல்கிறார். மூர்த்தி அதுனால ஒன்னும் இல்லை உங்களுக்கு பெரிய மனது என சொல்கிறார். போனை வைத்துவிட்டு அவன் வீட்டில் இருந்து சென்றாலும் எல்லாரும் உதவி செய்கிறீர்கள் என சொல்லி போனை கட் செய்கிறார். அதன் பின் லட்சுமி அம்மா உடல்நிலைஸ் சரியாகி பழைய மாதிரி வெளியே வந்து அனைவரிடமும் பேசுகிறார். எல்லாரும் அதை நினைத்து சந்தோசப்படுகின்றனர்.

கயல் பிறந்தநாள் அப்போது குலதெய்வம் கோவிலுக்கு சென்று மொட்டை போட வேண்டும் என சொல்கின்றனர். தனத்திற்கும் அப்போ குழந்தை பிறந்து 40 நாள் முடிந்திருக்கும் அவளுக்கும் சேர்த்து மொட்டை போடலாம் என சொல்ல, மீனா அவர் அப்பாவும் எதோ மொட்டை போட வேண்டும் என சொன்னதாக சொல்கிறார். உடனே லட்சுமி உன் அப்பாவிற்கு போட சொல்லு என கிண்டல் செய்கிறார். கண்ணன் கல்லூரி முடிந்து வேலைக்கு தாமதமாக வருகிறார். முதல் நாளே லேட்டா என ஜனார்த்தனன் கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!