தமிழகத்தில் இன்று மட்டும் 1,587 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பதிப்பிகள் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக பல விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக எல்லைகளில் வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்து வருவதாக இருந்த போதிலும், பாதுகாப்பு பணிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் ஏற்
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ வரை டாப் சீரியல் ப்ரோமோ – ரசிகர்களின் டாப் கமெண்டுகள்!
அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,587 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,27,365 பேர் ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,073 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,594 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,76,112 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 16,180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 1,59,772 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,35,88,378 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று கோவையில் 232 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 117 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும் புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.