குலதெய்வ கோவிலுக்கு செல்லும் குடும்பத்தினர், கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவு தரும் கஸ்தூரி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் குடும்பத்தினர், கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவு தரும் கஸ்தூரி - இன்றைய
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் குடும்பத்தினர், கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவு தரும் கஸ்தூரி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் குடும்பத்தினர், கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவு தரும் கஸ்தூரி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குலதெய்வ கோவிலுக்கு செல்ல திட்டமிடும் குடும்பத்தினர். கண்ணனை அழைக்க வேண்டும் என தனம் கேட்க , மூர்த்தி சரி என சொல்கிறார். பின் கஸ்தூரி கண்ணன் ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்று நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா தனம் இருக்க கயல் பாப்பா விளையாடி கொண்டிருக்கார். அப்போது தனம் இன்னும் கொஞ்ச நாள் தான் அப்பறம் சீக்கிரமாக தம்பி தங்கச்சி வந்துவிடும் நீ விளையாடலாம் என சொல்கிறார். மூர்த்தி தனம் ஜீவா கடையில் இருந்து வர, கயலை தூக்கி கொஞ்சுகின்றனர். கடைக்கு வரும் அனைவரும் அம்மா பற்றி கேட்கிறார்கள் அதான் வந்துட்டோம் என சொல்கிறார்கள். அப்போது மீனா கோவிலுக்கு செல்வது பற்றி சொல்ல, தனம் முருகன் சித்தப்பா வந்தாரு கோவிலுக்கு சென்று விளக்கு போட வேண்டும் என பார்வதி சித்தி சொன்னதாக சொல்கிறார்.

பின் முருகன் அங்கே வர நாளை கோவிலில் எல்லா வேலையும் செய்துவைத்துவிட்டேன் சீக்கிரமாக கோவிலுக்கு சென்றால் போதும் என முருகன் சொல்கிறார். குழந்தை பிறந்துவிட்டால் 22 நாள் கழித்து தான் போக வேண்டும் என தனத்தின் அம்மா சொல்கிறார். நாளைக்கு எண்ணெய் வைத்து குளித்துவிட்டு தான் செல்ல வேண்டும் என தனம் சொல்கிறார். பின் மூர்த்தியிடம் தனம் கண்ணனை அழைக்க வேண்டும் என கேட்க, சரி என மூர்த்தி சொல்கிறார். அதன் பின் அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர்.

இரட்டை குழந்தைகள் பற்றி உண்மையை சொன்ன பாரதி, DNA டெஸ்ட் எடுக்க அழைக்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அண்ணனிற்கு கோவம் குறைந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜீவாவும் கதிரும் பேசுகின்றனர். மறுபக்கம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் குலதெய்வ கோவிலுக்கு செல்வது பற்றி பேசிக் கொண்டிருக்க, ஐஸ்வர்யா போகலாம் என சொல்கிறார். ஆனால் கண்ணன் வேண்டாம் என சொல்ல, எல்லாரும் ஒன்றாக இருக்கும் போது நம்ம அங்கே போனால் நம்மை எதாவது சொல்வார்கள், நாம் படிக்க நேரம் கிடைத்திருக்கு அதனால் படிப்போம் என சொல்கிறார்.

பின் அனைவரும் கிளம்பி தயாராக இருக்க, கார் வர காத்துக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் கண்ணன் ஐஸ்வர்யா வீட்டிற்கு கஸ்தூரி வருகிறார். உடனே கண்ணனும் ஐஸ்வர்யாவும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். என்ன ஐசு சித்தி திட்டியதை மனதில் வைத்திருக்கியா என கேட்கிறார். அதெல்லாம் இல்லை என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் கண்ணனை எப்படி இருக்கிறாய் என கஸ்தூரி கேட்கிறார். கஸ்தூரி சின்ன வீடா இருந்தாலும் நல்ல வீடா இருக்கே என கஸ்தூரி சொல்கிறார்.

அக்.4ம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – உயர்கல்வி துறை அறிவிப்பு!

ஜனார்த்தனன் கடைக்கு வந்தேன், அங்கே சூப்பர் மார்க்கெட்டில் நடந்ததை பார்த்தேன், உங்க நிலைமையை நினைத்து வருத்தமாக இருந்தது, அதான் உங்களை பார்க்க வந்தேன் என கஸ்தூரி சொல்கிறார். நீங்க பண்ண தப்பிற்கு பண்ணது எல்லாம் போதும் இனிமேல் எதுவும் வேண்டாம் என கஸ்தூரி சொல்கிறார். பின் அனைவரும் கிளம்பி தயாராக இருக்க வண்டி எதுவும் வரவில்லை. நம்ம வண்டியில் போகலாம் என தனம் சொல்ல, புள்ளைய வயிற்றில் வைத்திருக்க, எப்படி குட்டி யானையில் வருவ என கேட்க, தனம் பிடிவாதமாக இருக்கிறார்.

பக்கத்தில் தான போக போறோம் என தனம் சொல்ல,முல்லையும் சரி என சொல்கிறார். பின் மீனா கண்ணன் கூட போனது ஞாபகம் வருகிறது என சொல்ல, இப்போ அவன் மட்டும் தான் இல்லை என சொல்கிறார். உடனே மூர்த்தி வேற எதாவது பேசு என கோபத்துடன் சொல்ல, அனைவரும் அந்த வண்டியில் கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!