இரட்டை குழந்தைகள் பற்றி உண்மையை சொன்ன பாரதி, DNA டெஸ்ட் எடுக்க அழைக்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பாரதியை தனியாக அழைத்து இரட்டை குழந்தைகள் பிறந்தது பற்றி சொல்கிறார். உடனே பாரதி உனக்கு பிரசவம் பார்த்ததே நான் தான் உனக்கு பிறந்தது ஒரு குழந்தை தான் என சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா நம்ம குழந்தையை காணவில்லை என சொல்ல, பாரதி என்ன நம்ம குழந்தையா என கேட்கிறார். உடனே கண்ணம்மா நம்ம இரண்டாவது குழந்தையை காணவில்லை என சொல்கிறார். கண்ணம்மா சொல்வது பாரதிக்கு புரியாமல் இருக்கும் நிலையில், கண்ணம்மா முழு விவரத்தையும் சொல்ல தொடங்குகிறார். நான் கர்ப்பமாக இருக்கும் போது தங்க இடம் இல்லாமல் அலைந்தேன் அப்போது ஒரு டாக்டரிடம் சென்றேன். அவர் என்னை ஸ்கேன் செய்து பார்த்தார்.
இப்போ 8 வருடம் கழித்து அந்த டாக்டரை பார்க்க போனேன் அவர் எனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக சொன்னதாக சொல்கிறார். உடனே பாரதி இன்னும் என்ன பொய் சொல்ல இருக்கிறாய் என நம்பாமல் இருக்க உன் வயிற்றில் வளர்ந்தது எத்தனை குழந்தை கூடவா உனக்கு தெரியாமல் இருக்கும் என பாரதி சொல்கிறார். பின் கண்ணம்மா அந்த நிலைமையில் எனக்கு எதுவும் தெரியவில்லை என சொல்ல, சரி இப்போ என்ன வேண்டும் என கேட்கிறார். அந்த குழந்தையை 8 வருடங்களுக்கு முன் காணவில்லை என கண்ணம்மா சொல்கிறார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,612 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
சரி யாரு கடத்தி வைத்திருப்பார் என பாரதி கேட்க, வெண்பா தான் என கண்ணம்மா சொல்கிறார். ஏற்கனவே நான் மருத்துவமனையில் இருக்கும் போது அங்கே வெண்பா எனக்கு விஷ ஊசி போட வந்தால் அப்போது துர்கா அண்ணன் வந்து என்னை காப்பாற்றினார். நான் மாசமாக இருக்கும் போதும் என்னை லாரி ஏற்றி கொல்ல பார்த்தால் என கண்ணம்மா செல்ல பாரதி நம்பாமல் இருக்கிறார். உனக்கு பிரசவம் பார்த்த டாக்டரிடம் கேட்க வேண்டியது தான என பாரதி சொல்ல, அவர்களிடம் எனக்கு கேட்க தோணவில்லை என கண்ணம்மா சொல்கிறார்.
உனக்கு பிறந்தது ஒரு குழந்தை தான் என பாரதி சொல்ல, என்னமோ நீங்க எனக்கு பிரசவம் பார்த்தது போல சொல்கிறீர்கள் என கண்ணம்மா கேட்கிறார். உடனே பாரதி ஆமாம் நான் தான் உனக்கு பிரசவம் பார்த்தேன் என சொல்ல, நீங்க அன்று என் மேலே இருந்த வெறுப்பில் எப்படி பார்த்திருக்க முடியும் என கண்ணம்மா கேட்கிறார். நான் என் தொழிலிற்கு துரோகம் செய்ய கூடாது. எல்லா நோயாளிகளையும் ஒரே மாதிரி நடத்துவேன் என என் அம்மாவிற்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கேன்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சன்டிவி ‘ரோஜா’ வரை – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்கள்!
அது என் நண்பரின் மருத்துவமனை ஒரு நாள் நான் அங்கே இருக்கும் போது ஒரு நர்ஸ் ஓடி வந்து ஒரு பெண் பிரசவ வலியால் துடிக்கிறாள், நீங்க வந்தா தான் இரண்டு உயிர்களை காப்பாற்ற முடியும் என சொன்னார். நான் வந்து பார்த்தால் அது நீ, என் அம்மாவிற்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை நான் காப்பாற்ற தான் உனக்கு பிரசவம் பார்த்தேன் உன் குழந்தையை முதலில் தூக்கியதே நான் தான் என பாரதி சொல்கிறார். உடனே கண்ணம்மாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
அன்னைக்கு வளைகாப்பு நிகழ்ச்சியில் வெண்பா என் மனைவி இல்லை என்ற உண்மை தெரிந்ததால் அவள் மீது இவ்வளவு பெரிய பழி போடுவியா என பாரதி கேட்கிறார். உடனே கண்ணம்மா நான் சொல்வது உண்மை அவள் என்னை மிரட்டுகிறாள் என சொல்ல பாரதி நம்பவே இல்லை. அவனுக்கு இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டு அதை காணவில்லை என சொல்கிறாயா என பாரதி சொல்ல, உடனே கோவப்பட்ட கண்ணம்மா பாரதியை காத்துகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனத்திற்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? வெளியான ட்விஸ்ட்!
ஏற்கனவே எவனோ பெற்ற குழந்தைக்கு என் பெயர் முதல் எழுத்தாக வைத்து வளர்த்து வர இதில் என் தோழி வெண்பாவை என்னிடம் குறை சொல்கிறாயா என பாரதி சொல்ல, உன் முன்னால் நான் எப்படி வாழ்ந்து காட்டுவேன் பாரு என கண்ணம்மா சொல்ல, பாரதி இது மட்டும் எத்தனை வருஷம் ஆனாலும் உன்னிடம் இருந்து மாறவில்லை என பாரதி சொல்ல, அப்போ வா நம்ம மூணு பேரும் சென்று DNA டெஸ்ட் எடுப்போம் என கண்ணம்மா பாரதியை கூப்பிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.