சமையல் ஆர்டரை சிறப்பாக செய்து முடித்த பாக்கியா, நேரம் ஆகியதால் கோவத்தில் தொழிலதிபர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் பாக்கியா சமையல் ஆர்டரை அனைவரும் சேர்ந்து சமைத்துவிடுகின்றனர். ஆனால் ஒரு சிலர் சமையல் சரியாக வரவில்லை என வந்து புகார் தெரிவிக்கின்றனர். கோபி சமையல் சரியாக செய்வில்லை என்றால் உனக்கு பெரிய பிரச்சனை ஆகும் என சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா அனைவருக்கும் மளிகை பொருள்கள் பிரித்து கொடுக்க அதில் ஒருவர் வந்து என்னால் சமைக்க முடியாது என சொல்கிறார். அப்போது அமிர்தா நாம் இதையும் சேர்த்து சமைத்துவிடலாம் என சொல்கிறார். பின் இன்னும் ஒருவருக்கு போன் செய்ய அவர் போனை எடுக்கவில்லை. அதனால் அவருடையதை சேர்த்து நான் சமைக்கிறேன் என செல்வி சொல்கிறார். பின் பாக்கியா நிம்மதியாக இருக்க, அப்போது ஒருவர் வந்து என் சித்தப்பா செத்துட்டாங்க அதனால் நான் ஊருக்கு போகிறேன் என சொல்கிறார்.
அவர் பாயாசம் செய்ய இருப்பதாக சொல்ல, தாத்தா நான் சமைக்கிறேன் என சொல்கிறார். பின் அவர் பின்னாடி சென்று சமைத்துவிட பாக்கியா சென்று ருசித்து பார்க்கிறார். அப்போது சூப்பராக இருக்கிறது என சொல்லிவிட்டு, பாக்கியாவின் சாப்பாடு அனைத்தும் சமைத்துவிடுகிறார். பின் சமையல் செய்யும் ஒருவர் வந்து சர்க்கரை பாகு கருகிவிட்டது என சொல்கிறார். அதன் பின் பாக்கியா சர்க்கரை எடுத்துக் கொடுக்கிறார். பின் இன்னொருவர் வந்து உளுந்தில் தண்ணீர் அதிகமாகிவிட்டது என சொல்கிறார். பின் கோபி வர சமையல் ஆர்டர் சரியாக செய்யாமல் இருந்தால் உனக்குஇருக்கிறது என சொல்கிறார்.
அப்போது ஒருவர் வந்து என் மனைவிக்கு வீட்டில் நிறைய வேலை இருக்கு அவளை எதற்கு சமைக்க சொன்னீங்க என கேட்கிறார். அவர் சத்தம் போட்டுவிட்டு செல்ல, கோபி பாக்கியாவை திட்டுகிறார். பின் தொழிலதிபர் வந்துவிட இன்னும் சாப்பாடு வரவில்லை என நினைத்து கோபப்படுகிறார். பின் அனைவரும் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க சரியான நேரத்தில் வண்டியும் வருகிறது. பின் சாப்பாடை பாக்கியா ஏற்றிவிட அனைவரும் கை தட்டி வாழ்த்து தெரிவிக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.