வீடு வாடகைக்கு தேடி அலையும் கதிர், கடை பொறுப்புகளை கவனிக்கும் ஜீவா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வர மூர்த்தி நிலைமையை நினைத்து கண்ணனும் ஜீவாவும் வருத்தப்பட்டு அழுகின்றனர். அவர்களின் பாசத்தை பார்த்து மூர்த்தி வருத்தப்படுகிறார். பின் கதிர் தன்னுடைய நண்பருடன் சேர்ந்து தனியாக வாடகைக்கு வீடு தேடி அலைகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி மருத்துவமனையில் இருந்து வந்ததும் கண்ணன் அவர் தோளில் சாய்ந்து கண்ணீர் வடிக்கிறார். எனக்கு ஒன்றுமில்லை என மூர்த்தி பாசத்துடன் பேசுகிறார். பின் ஜீவாவும் வருத்தப்பட்டு அழுகிறார். மூர்த்தி என்ன தனம் இவங்க இப்படி இருக்காங்க என கேட்க கஸ்தூரி கதிர் தம்பி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என சொல்கிறார். இந்த சின்ன விசயத்திற்கு வீட்டை விட்டு வெளியே போவது எல்லாம் சரி இல்லை என கஸ்தூரி சொல்கிறார்.
பின் மூர்த்தி இது அவனுடைய முடிவு அவன் வாழ்க்கை அவன் இஷ்டம் என சொல்கிறார். அப்போது மீனா மூர்த்தி மாமாவிற்கு நான் நாட்டுக்கோழி குழம்பு வைத்து கொடுக்கிறேன் என சொல்ல தனம் நீயா என கேட்கிறார். நான் இப்போ எல்லாம் எப்படி சமைக்கிறேன் தெரியுமா என மீனா கேட்கிறார். பின் தனம் டாக்டர் இனிமேல் அசைவம் சாப்பிட கூடாது என சொல்லி இருக்கிறார். எல்லாரும் இனி சைவம் தான் சாப்பிட வேண்டும் என சொல்ல பால் கூட குடிக்க கூடாதாம்.
TN Job “FB Group” Join Now
அதனால் எல்லாரும் இனி இளநீர் தான் காலையில் குடிக்க வேண்டும் என சொல்ல அப்போ கயல் பாண்டியன் என கண்ணன் கேட்கிறார். அவர்களுக்கு மட்டும் பால் வாங்கலாம் என சொல்ல கண்ணன் எனக்கும் பால் வேண்டும் என சொல்கிறார். தனம் சரி என சொல்ல மீனா அதெல்லாம் ஒப்புக் கொள்ள முடியாது என சொல்கிறார். ஜீவா தனம் கேட்ட பொருள்களை எல்லாம் வாங்கி வருகிறார். அப்போது மூர்த்தி கடை பற்றி கேட்க சரவணன் பார்த்து கொள்கிறான் என ஜீவா சொல்கிறார்.
பின் அக்கம் பக்கத்தினர் ஒருவர் அண்ணனை பார்க்க வரேன் என சொன்னார். நான் வேண்டாம் என சொல்லிவிட்டேன் அவர்கள் வந்து கதிர் தான் அண்ணனிற்கு காரணம் என சொல்வார்கள் என சொல்ல தனம் நீ சொல்வது சரி தான் என சொல்கிறார். பின் மூர்த்தி எனக்கு உடம்பு சரியில்லாமல் போனதற்கு கதிர் என்ன செய்வான் நான் என் உடம்பை பார்த்துக் கொள்ளாமல் இருந்ததால் தான் வந்தது என சொல்கிறார். பின் கண்ணன் வர மூர்த்தி யாரை பற்றி பேசுவதாக கேட்கிறார். கதிரை பற்றி பேசுவதாக சொல்ல கண்ணன் அதிர்ச்சி அடைகிறார்.
கண்ணன் கதிர் அண்ணன் உங்களை பார்க்க மருத்துவமனைக்கு வந்து இருந்தார் என சொல்ல மூர்த்தி அவனை பற்றி பேச வேண்டாம் என சொல்கிறார். பின் கண்ணன் தனத்திடம் நீங்க கூப்பிடும் வரவில்லை என உங்களுக்கு கோவமா என கேட்கிறார். கதிர் அண்ணன் இன்னைக்கு கூட மருத்துவமனைக்கு வந்துச்சு போல அண்ணன் டிஸ்சார்ஜ் ஆனதை பார்த்துவிட்டு போயிருக்கும் போல நான் பேச கூப்பிட்டேன் ஆனால் அண்ணன் வரவில்லை என சொல்கிறார்.
ரோஹித் மீது சந்தேகப்பட்ட சாந்தி, மாட்டிக் கொள்வாரா ரோஹித்? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
மறுப்பக்கம் கதிர் அவருடைய நண்பர் ஒருவருடன் சேர்ந்து வாடகைக்கு வீடு பார்த்து அலைகிறார். மூன்று வீடுகளை அவருடைய நண்பர் காட்ட அதில் மூன்றாவது பார்த்த வீடு கதிருக்கு பிடிக்கிறது. வாடகை 5000 ரூபாய் என சொல்ல கதிர் சரி என சொல்கிறார். பின் எல்லா பக்கமும் வீட்டை பார்க்கின்றனர். பின் மூர்த்தி ஜீவாவிடம் கடையில் வேலை நிறையா இருக்கும் இன்னும் 2 நாட்களில் நானும் வந்துவிடுவேன் என சொல்ல ஜீவா உங்களை 1 மாதம் ஓய்வு எடுக்க சொன்னதாக சொல்கிறார். நிறைய பேருக்கு பணம் கொடுக்க வேண்டும் அதனால் நிறைய வேலை இருக்கிறது என சொல்கிறார்.
கடையில் பொருள்கள் குறைவாக இருந்தது அதை சீக்கரம் நிரப்ப வேண்டும் என சொல்கிறார். நீயும் உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். என்னை பாரு உடம்பை கவனிக்காமல் இப்படி இருக்கிறேன் என சொல்கிறார். இந்த பிரச்சனை உடம்பை பார்த்துக்காமல் வரவில்லை என ஜீவா சொல்ல அதுவும் சரி தான் மூர்த்தி சொல்கிறார். கடையை சரியாக பார்த்துக் கொள் என மூர்த்தி சொல்ல ஜீவா சரி என சொல்கிறார். இத்தனை நாள் ஓடியது போதும் இப்போது நிம்மதியாக இருங்க என சொல்கிறார்.