மூர்த்தியை பார்க்க வந்த கதிர், வெளியே போக சொன்ன தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மூர்த்தி பார்க்க வந்த கதிர், வெளியே போக சொன்ன தனம் - இன்றைய
மூர்த்தி பார்க்க வந்த கதிர், வெளியே போக சொன்ன தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மூர்த்தியை பார்க்க வந்த கதிர், வெளியே போக சொன்ன தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்திக்கு ஆப்ரேசன் நடந்து கொண்டிருக்கும் போதும் தனம் அம்மாவும் மீனாவின் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். பின் கதிர் மூர்த்தியை பார்க்க வர தனம் கதிரை வீட்டிற்கு வரேன் என அண்ணனிடம் சொல்ல சொல்கிறார். ஆனால் கதிர் அதற்கு மறுப்பு தெரிவிக்க தனம் கதிரை வெளியே போக சொல்லி கோவமாக பேசுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தியை பார்க்க வந்த தனத்தின் அம்மா அப்போது கூட மீனாவின் அப்பாவிடம் சண்டை போடுகிறார். மீனாவின் அப்பா உங்க மருமகள் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என சொல்கிறார். அவர் நாங்க பேசுவதை கேட்டு வந்து முல்லை அம்மாவிடம் பேசியதால் தான் எல்லாம் நடந்தது என சொல்கிறார். பதிலுக்கு கஸ்தூரி நீங்க பேசியதை தான நான் கேட்டேன் நீங்க தான் பேசியதை ஒப்புக் கொண்டு இருக்கீங்களே என கேட்கிறார். இப்படியே சண்டை வளர தனம் உள்ளே ஒருத்தர் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

நீங்க இப்படி சண்டை போடுறீங்க உங்களை யார் இங்கே வர சொன்னா முதலில் கிளம்புங்கள் என சொல்ல ஜீவாவும் அமைதியாக இருங்க என சொல்கிறார். பின் மீனாவின் அப்பா அமைதியாக இருக்கிறார். அப்போது கதிர் முல்லை வருகின்றனர். தனம் அவர்களை பார்த்து அழ அப்போது கதிர் எல்லாத்துக்கும் நான் தான் காரணம் என. கதிர் தனத்தின் கையை பிடித்துக் கொண்டு அழுகிறார். அப்போது தனம் இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் நீ வந்துவிட்டாய் அண்ணனிற்கு இப்போது நடப்பது எதுவும் தேவை இல்லை நீ வீட்டிற்கு வருகிறேன் என சொன்னால் போதும் என சொல்கிறார்.

அண்ணனிடம் நீ வீட்டிற்கு வரேன் என சொல்லு கதிர் என கேட்க ஜீவாவும் சொல்லுடா என்ன அமைதியாக இருக்கிறாய் என கேட்கிறார். மீனாவின் அப்பா இந்த ஊரில் அண்ணன் தம்பி பாசம் என்றால் அதற்கு எடுத்துக்காட்டாய் உங்களது குடும்பத்தை தான் சொல்வார்கள் ஆனால் நீங்களே இந்த பிரச்சனைக்கு இப்படி ஒரு முடிவு எடுக்கலாமா குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கும் அதற்காக இப்படி ஒரு முடிவு எடுத்ததால் மூர்த்தி இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார் என சொல்கிறார்.

பின் தனத்தின் அம்மாவும் என்ன தம்பி அமைதியாக இருக்கீங்க வரேன் என சொல்லுங்க என சொல்ல கஸ்தூரியும் வர சொல்ல சொல்கிறார். ஆனால் கதிர் நான் என்ன சொல்ல அண்ணி எல்லாம் சொல்லி முடித்துவிட்டேன் என சொல்ல உடனே ஜீவா என்ன பேசுகிறாய் என கேட்கிறார். தனம் ஜீவாவிடம் இவன் எதற்கு இங்கே வந்தான் அண்ணனின் உயிரை விட அவன் சொன்ன வார்த்தை தான் முக்கியம் அவனுக்கு அப்போ எதற்கு வந்தான் அவர் இருக்கிறாரா இல்லை வேறு எதாவது ஆகிவிட்டதா என்பதை பார்க்க வந்திருக்கானா என கேட்கிறார்.

வெண்பாவை காதலிக்கவில்லை என சொன்ன பாரதி, சந்தோஷத்தில் குடும்பத்தினர் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அவனை இங்கே இருந்து போக சொல் என சொல்ல கதிர் முல்லை விலகி செல்கின்றனர். அப்போது மீனாவின் அப்பா போனில் பேசிக் கொண்டிருக்கிறார். கண்ணன் வந்து பணம் கொடுத்து உதவி செய்ததற்கு நன்றி என சொல்ல மீனாவின் அப்பா நீயும் என்னை அசிங்கப்படுத்த வேண்டுமா என கேட்கிறார். பணம் கொடுத்து உதவி செய்கிறீர்கள் பின் பணத்தை கேட்டு சண்டை போடுகிறீர்கள் என கண்ணன் கேட்க மீனாவின் அப்பா கோவமாக பேசுகிறார். அதனால் கண்ணன் அங்கிருந்து சென்று விடுகிறார்.

பின் தனம் மூர்த்தியை பார்த்து வருத்தப்பட அப்போது மயங்கி கீழே விழுகிறார். அனைவரும் பதட்டம் அடைய கண்ணன் தண்ணீர் கொண்டு வருகிறார். பின் நர்ஸ் வந்து பார்த்துவிட்டு பிபி அதிகமாக இருக்கிறது பதட்டமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். அவருக்கு எதாவது சாப்பிட கொடுங்க என கேட்க ஜீவா ஜூஸ் வாங்க செல்கிறார். பின் கதிரும் ஜூஸ் வாங்க செல்கிறார். ஜீவா வாங்கி கொண்டு வந்த ஜூஸை தனம் குடிக்க கதிர் ஜூஸ் வாங்கி வந்ததை பார்த்து தனம் வருத்தத்துடன் பார்க்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!