சிறப்பாக நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை, சந்தோஷத்தில் மீனாவின் அப்பா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீனாவின் வீட்டில் சந்தோசமாக பொங்கல் கொண்டாடுகின்றனர். மீனாவின் அப்பா அதை பார்த்து மிகவும் சந்தோசமாக இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா வீட்டில் குடும்பத்துடன் சேர்ந்து பொங்கல் வைக்க நல்லபடியாக பொங்கல் பொங்குகிறது. குடும்பத்தில் அனைவரும் பொங்கலோ பொங்கல் என சொல்லி சந்தோசப்படுகின்றனர். மீனாவின் அப்பா பொங்கல் எல்லாம் வைத்து விட்டோம் சாப்பாடு ரெடியா என கேட்க, அதெல்லாம் தயாராக இருப்பதாக சொல்கிறார். பின் மீனாவின் அப்பா மிகவும் சந்தோசமாக இருப்பதை பார்த்து தனம் சந்தோசப்படுகிறார். ஜீவா இத்தனை நாட்களாக வீட்டிற்கு கூப்பிடுவார் ஆனால் இவ்வளவு சந்தோஷப்படுவார் என தெரியவில்லை என சொல்கிறார்.
எல்லருடன் சேர்ந்து கொண்டாடினால் தான் பண்டிகை நன்றாக இருக்கும், நீங்க எல்லாரும் வராமல் இருந்தால் நானும் கலை மட்டும் பொங்கல் வைத்துவிட்டு ரோட்டை பார்த்து உட்கார்ந்து இருப்பேன் என சொல்கிறார். பின் முல்லையை பார்த்து உங்க அம்மா அப்பாவிற்கும் பொங்கல் இல்லை அல்லவா அவர்களையும் கூப்பிட்டு இருக்கலாம் என சொல்கிறார். பின் மீனாவின் அப்பா கரும்பு கொண்டு வந்து கொடுக்க அதை கதிர் கைலாசத்தை உடைக்க சொல்கிறார். பின் கைலாசம் உடைக்க முடியாமல் இருக்க கதிர் ஜீவாவை உடைக்க சொல்கிறார்
கதிரும் ஜீவாவும் உடைக்க, குடும்பத்தினர் அனைவரும் அதை பார்த்து சந்தோசப்படுகிறார். பின் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வர இன்னும் குடும்பத்தில் யாரும் வரவில்லை என ரோட்டில் அமர்ந்து இருக்கின்றனர். பின் வேன் வந்து நிற்க அனைவரும் இறங்கி உள்ளே வருகின்றனர். தனம் பொங்கல் எப்படி போச்சு என கேட்க, சித்தி என்னை நன்றாக பார்த்து கொண்டார். நான் கூட வேலை சொல்லுமோ என நினைத்தேன் ஆனால் அப்படி இல்லை சாப்பாடே 4 வகை வைத்ததாக சொல்கிறார். உடனே மீனாவும் வீம்புக்கு என் அப்பா இனிப்பே 4 வகை வைத்தார்கள் என சொல்கிறார்.இப்படியே சண்டை போட்டு கொண்டிருக்க, தனம் எப்போ பார்த்தாலும் இப்படி தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என சொல்கிறார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜன.17 (திங்கட்கிழமை) பொது விடுமுறை!
பின் முல்லையின் அம்மா முல்லை பொங்கலுக்கு அவரது வீட்டிற்கு வரவில்லை என சத்தம் போடுகிறார். உனக்கு வீடா இல்லை ஏன் மீனா வீட்டிற்கு போய் இருக்கிறாய் என கேட்க, மீனாவின் அப்பா ரொம்ப வற்புறுத்தினார் அதனால் தான் போனோம் நம்ம வீட்டில் தான் பொங்கல் இல்லையே என சொல்ல, பொங்கல் இல்லை என்றால் என்ன நீ இந்த வீட்டிற்கு வந்து எத்தனை நாள் ஆகிறது அதனால் வந்திருக்கலாமே என கேட்கிறார்.