கயல் பாண்டியன் கையால் திறக்கப்பட்ட “பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ்”, மகிழ்ச்சி வெள்ளத்தில் குடும்பம் – இன்றைய எபிசோட்!

0
கயல் பாண்டியன் கையால் திறக்கப்பட்ட
கயல் பாண்டியன் கையால் திறக்கப்பட்ட "பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ்", மகிழ்ச்சி வெள்ளத்தில் குடும்பம் - இன்றைய எபிசோட்!
கயல் பாண்டியன் கையால் திறக்கப்பட்ட “பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ்”, மகிழ்ச்சி வெள்ளத்தில் குடும்பம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கடை திறப்பு விழாவில் கண்ணன் மற்றும் கயல் சேர்ந்து கடையை திறந்து வைக்கின்றனர். பின் சொந்தங்கள் வர கடை திறப்புவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கடையை பார்த்து குடும்பத்தினர் சந்தோசப்படுகின்றனர். அலங்காரம் எல்லாம் அருமையாக இருக்கிறது என சொல்ல, ஐஸ்வர்யா அந்த கோலம் நான் போட்டது அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை என ஐஸ்வர்யா கேட்கிறார். பின் மீனா ஐசு கோலம் அருமையாக இருக்கிறது என மீனா சொல்ல, தனமும் நன்றாக இருக்கிறது என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா அந்த ஓரமாக இருப்பது எல்லாம் இவங்க போட்டது என சொல்கிறார். எல்லா மகாலக்ஷ்மிகளும் வலது கால் எடுத்துவைத்து உள்ளே போங்க என சொல்ல, மீனா யாரு மகாலக்ஷ்மி என மூர்த்தியை கிண்டல் செய்கிறார்.

பிறந்தநாள் விழாவிற்கு பாரதி & வெண்பாவை அழைத்த கண்ணம்மா, ரகசியம் பற்றி குழப்பத்தில் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

மறுபக்கம் கயல் ட்ரெஸ் நன்றாக இருப்பதாக கதிர் சொல்ல அப்போ நான் என முல்லை கேட்கிறார். நீயும் நன்றாக தான் இருக்கிறாய் என கதிர் சொல்ல, மீனா என்னுடைய ட்ரெஸ் எப்படி இருக்கிறது என கேட்கிறார். அப்போது ஜீவா சுமாராக தான் இருக்கிறது என சொல்ல, மீனா ஐஸ்வர்யா ட்ரெஸ் எப்படி இருக்கிறது என கண்ணனிடம் கேட்கிறார். கண்ணன் இந்த புடவையில் தேவதை போல இருப்பதாக சொல்ல, மீனா கண்ணனை கிண்டல் செய்கிறார். பின் மீனாவின் அப்பா வர கடை நன்றாக பெரிதாக இருப்பதாக சொல்கிறார்.

பின் சொந்தங்கள் வர, தனத்தின் அண்ணன் வருகிறார். இவ்வளவு நேரமா என தனம் கேட்க, நேற்று முதல் இவர் இங்கே தான் இருப்பதாக மூர்த்தி சொல்கிறார். பின் கஸ்தூரி ஐஸ்வர்யாவை பார்த்து நீ தான் எல்லாரையும் வரவேற்பதா என கேட்கிறார். பின் இவ்வளவு பெரிய கடையா என பார்த்து அதிர்ச்சி அடைகிறார். முல்லை என்னுடைய அப்பா வரவில்லையா என கேட்க, உங்க அப்பா தான் காலையிலே வந்துவிட்டார் என கதிர் சொல்கிறார். பின் முல்லையின் அப்பா வர அம்மா வரவில்லையா என கேட்கிறார். மீனாவின் அப்பா எதுவும் சிறப்பு விருந்தினர் வருகிறாரா என கேட்க, யாரும் வரவில்லை என சொல்கிறார். எப்படியும் தனம் தான் கடையை திறப்பார் என சொல்ல மீனா யார் திறந்தாள் என்ன மீனா கேட்கிறார்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் அதிர்ச்சி!

ஜெகா நல்ல நேரம் ஆகிவிட்டது என சொல்ல, மூர்த்தி எல்லாருடைய ஆசிர்வாதத்துடன் கடையை திறக்க போகிறோம் என் அம்மா இருந்திருந்தால் பார்த்து சந்தோசப்பட்டிருப்பார் ஆனால் அவர் இல்லை. ஆனால் அவருடைய ஆசிர்வாதம் இப்போதும் எங்களுக்கு இருப்பதாக சொல்கிறார். பின் எங்க வீட்டு குழந்தைகள் கயல் மற்றும் பாண்டியன் கையால் கடையை திறக்க போகிறோம் என சொல்ல, மீனாவும் தனமும் முன்னாள் வருகின்றனர். அப்போது முல்லை ஐஸ்வர்யாவை வர சொல்லி கடையை திறக்கின்றனர். பின் அம்மா புகைப்படத்தை பார்த்து அண்ணன் தம்பிகள் வருத்தப்படுகின்றனர்.

மீனாவின் அண்ணன் அப்போது வர என்ன நல்ல நாள் அதுவுமா அழுது கொண்டே இருக்கீங்க என சொல்ல, மூர்த்தியை அழைத்து கல்லாவில் உட்காரவைக்கின்றனர். பின் முதல் வியாபாரத்தை தொடங்குகள் என சொல்ல, தனம் நீயே சென்று வாங்கு என சொல்கிறார். மீனாவின் அப்பா, முல்லையின் அப்பா அனைவரும் வியாபாரம் பார்க்கின்றனர். தனம் மஞ்சள் வாங்கி வியாபாரத்தை தொடர்கிறார். பின் மீனாவின் அப்பா கடை நன்றாக இருப்பதாக சொல்ல, மாப்பிள்ளை நாம கடைக்கு வரமாட்டார் போல என மீனாவின் அப்பா நினைக்கிறார்.

முல்லையின் அப்பா கதிரிடம் நன்றாக இருப்பதாக சொல்ல, தனம் கல்லாவில் அமர்ந்து வியாபாரம் பார்க்கிறார். அதை பார்த்து கண்ணன் போட்டோ எடுத்து சந்தோசப்படுத்துகிறார். தனம் அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து சந்தோசப்படுகிறார். மீனாவின் அண்ணன் பெரிய கடை என நினைத்தேன் ஆனால் சின்ன கடையாக இருப்பதாக சொல்கிறார். பின் இனிமேல் உங்க மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார் என கேட்டால் சூப்பர் மார்க்கெட் வைத்திருப்பதாக சொல்ல சொல்கிறார். ஆனால் மீனாவின் அப்பா நான்கு பேருக்கு ஒரு சூப்பர் மார்க்கெட் என சொல்கிறார்

கண்ணம்மா வினுஷா தேவியை பின்னுக்கு தள்ளிய சுந்தரி சீரியல் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

தனத்தின் அம்மா கடை அருமையாக இருப்பதாக சொல்ல, தனம் ஒன்னும் இல்லாத குடும்பம் என சொல்லாத என சொல்கிறார். எல்லாம் நீ வந்த நேரம் என சொல்ல, கதிர் முல்லை கல்லாவில் இருக்கின்றனர். ஐஸ்வர்யாவிடம் கஸ்தூரி அருமையாக இருப்பதாக சொல்ல, மூர்த்தி தனம் ஜெகா கடை திறந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!