மீனா அப்பாவிடம் உதவி கேட்ட ஜீவா, கோவத்தில் பூட்டை உடைக்க சென்ற கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் ஜீவாவும் சரக்கை எங்கே இறக்கி வைப்பது என தெரியாமல் வருத்தத்துடன் இருக்க மீனாவின் அப்பாவிடம் உதவி கேட்கலாம் என முடிவு செய்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவாவும் கதிரும் சரக்கை எங்கே இறக்குவது என தெரியாமல் இருக்கின்றனர். அந்த லாரி ட்ரைவரிடம் இன்னும் ஒரு நாள் அவகாசம் தரும்படி சொல்கிறார். லாரி ட்ரைவர் எதுவும் செய்யமுடியாது என சொல்ல, எங்க நிலைமையை பார்த்து தான இருக்கீங்க எங்களால் கடை திறக்க முடியவில்லை என சொல்கிறார். சரி தம்பி இன்னைக்கு ஒரு நாள் நான் சமாளிக்கிறேன் அதற்குள் எதாவது ஏற்பாடு பண்ணுங்க என சொல்ல, உடனே ஜீவா கதிர் எல்லா பக்கமும் கேட்டு பார்க்கின்றனர். ஆனால் யாரும் உதவி செய்வதாக இல்லை.
TN Job “FB Group” Join Now
அதனால் ஜீவா மீனாவின் அப்பாவிடம் உதவி கேட்கிறார். கடைக்கு சரக்கு வந்திருக்கிறது என சொல்ல, கடையை திறக்காமல் எதற்காக இவ்வளவு சரக்கு வாங்குனீங்க என கேட்கிறார். இப்போ சரக்கை இறக்கி வைக்க வேண்டும் உங்க குடவுனில் இடம் இருக்கிறதா என கேட்க, இல்லை என மீனாவின் அப்பா சொல்கிறார். ஜீவா எதாவது ஏற்பாடு செய்ங்க என கேட்க, நான் இருக்கிறேன் எல்லாம் பார்த்துக் கொள்கிறேன் என மீனாவின் அப்பா சொல்கிறார். ரொம்ப நன்றி என சொல்லி ஜீவா அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது மீனாவின் அப்பா என்ன செய்ய போறீங்க என கேட்க, நான் எதுவும் செய்ய போவதில்லை என சொல்கிறார்.
கடை வராமல் இருந்தால் தான் இவரு நம்ம பக்கம் வருவாரு அப்போ தான் மீனாவின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என சொல்ல, நீங்க உதவி செய்வீங்க என காத்துக் கொண்டிருப்பார்கள் என கேட்கிறார்கள். அதெல்லாம் அவங்க பிரச்சனை மீனாவின் வாழ்க்கை மட்டும் தான் எனக்கு முக்கியம் என மீனாவின் அப்பா சொல்கிறார். பின் கதிர் கடை மூடி இருப்பதை பார்த்து கவலைப்படுகிறார். கடைக்கு எவ்வளவு வேலை செய்திருக்கோம் என நினைத்து கோவப்பட, அங்கே வைத்திருந்த தடுப்பை தள்ளிவிட்டு பூட்டை உடைக்க செல்கிறார்.
அப்போது போலீஸ் வந்து தடுக்க முல்லையின் அப்பாவும் வருகிறார். முல்லை அப்பா கோவத்தை குறைங்க என சொல்ல, போலீஸ் பூட்டை உடைத்தால் கைது செய்துவிடுவேன் என சொல்கிறார். பின் கதிர் நம்ம கடை வாசலில் கூட நிற்கவிடாமல் செய்துவிட்டார்கள் என நினைத்து வருத்தப்படுகிறார். பின் நான் சரக்கு வைக்க இடம் பார்க்கிறேன் என முல்லை அப்பா ஆறுதல் சொல்ல, இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.