கயலின் காது குத்து விழாவிற்கு வந்த குடும்பத்தினர், தாய்மாமா சீர் கொண்டு வந்த ஜெகா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கயல் பிறந்தநாளுக்கு அனைவரும் கிளம்பி கோவிலுக்கு வருகின்றனர். தனத்தின் அண்ணன் சீர் செய்ய தட்டுகளை எடுத்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கயல் காது குத்து நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா அழகாக கோலம் போடுகிறார். கண்ணன் வந்து அதை பார்த்து மிகவும் அழகாக இருக்கிறது என சொல்ல, அந்த நேரம் மீனாவின் அப்பா அம்மா வருகின்றனர். மீனாவின் அம்மா கோலம் நன்றாக இருக்கிறது என சொல்லி வீட்டிற்குள் செல்கிறார். மீனாவின் அப்பா கண்ணனை பார்த்து முறைத்து கொண்டிருக்கிறார். அப்போது ஐஸ்வர்யா இது உங்க சூப்பர் மார்க்கெட் இல்லை எங்க வீடு என சொல்ல, என்ன சொன்ன என கேட்கிறார். ஐஸ்வர்யா ஒன்றுமில்லை என கண்ணன் சமாளிக்கிறார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு – எடப்பாடி பழனிசாமி அறிக்கை!
உள்ளே வந்த மீனாவின் அப்பா அம்மா கயலை வாங்கி கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனம் மீனாவை கூப்பிட அம்மா அப்பா வந்த சந்தோஷத்தில் மீனா இருக்கிறார். பின் அனைவரும் கிளம்பி இருக்க, லட்சுமி அம்மா புகைப்படத்தை கும்பிட்டு கிளம்புகின்றனர். கோவிலுக்கு செல்ல அங்கே அனைவரும் காது குத்து விழாவிற்கு வருகின்றனர். வாசலில் முல்லையும் கதிரும் நிற்க கண்ணன் வந்து வம்பிழுக்கிறார். அவரை அனுப்பிவிட்டு முல்லை கதிர் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் தனத்தின் அண்ணன் ஆட்டோ நிறைய சீர் உடன் வருகிறார்.
கதிர் அதை பார்த்து என்ன அது என கேட்க, என் தங்கச்சி மகளுக்கு நான் தான தாய் மாமா சீர் செய்ய வேண்டும் என சொல்கிறார். பின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்க, தனத்தின் அம்மாவிடம் ஐஸ்வர்யா நன்றாக இருக்கீங்களா என கேட்க அவர் பேசாமல் செல்கிறார். பின் முல்லை அப்பா அம்மா என குடும்பத்தில் அனைவரும் வர காது குத்து நிகழ்ச்சி தொடங்குகிறது. மீனா அப்பா அவரது சொந்தங்களை மூர்த்தியிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்