தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு – எடப்பாடி பழனிசாமி அறிக்கை!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உதவும் வகையில் பொங்கல் பரிசு பொருள் ஆண்டுதோறும் அரசால் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் தைப்பொங்கல் தினத்தை பொது மக்கள் சிறப்பாக கொண்டாட அரசு ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான பரிசு தொகுப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொருட்கள் இருக்கும் என்றும் அதனை மஞ்சப்பையில் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான பணிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் வருகிற ஜனவரி 3ம் தேதியிலிருந்து அனைத்து ரேஷன் கடைகளில் இருந்து பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு? மத்திய அரசு அவசர கடிதம்! பொதுமக்கள் அச்சம்!
இந்த பரிசு தொகுப்பானது குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் வசிக்கும் மறுவாழ்வு மையங்களில் உள்ளவர்கள் என மொத்தம் 2.15 கோடி பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு போன்ற 21 வகையான பொருட்கள் வழங்கப்படுகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது – அரசுக்கு கண்டனம்!
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொன்றும் ரூ.505 செலவில் தயார் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இந்த பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 வழங்கியதை எடப்பாடி பழனிசாமி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த ஆண்டு வழங்காததால் பொதுமக்கள் சற்று கவலையுடன் கோபத்துடனும் இருப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் ஏழை எளிய மக்கள் இந்த பரிசு பொருளை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இதனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசுடன் ரூ.2500 வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.