குடும்பத்திற்கு புது வீடு வாங்க திட்டமிடும் தனம், நைட்டி போட்டு வந்த ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டார்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா நைட்டி போட்டு வந்திருக்க கண்ணன் மீனா அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் தனம் சொல்வதை கூட ஐஸ்வர்யா கேட்காமல் இருக்க சின்ன பொண்ணு தான பார்த்துக் கொள்ளலாம் என தனம் சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், அனைவரும் சாப்பிட அமர ஐஸ்வர்யா நைட்டி உடன் வருகிறார். கண்ணன் அதை பார்த்து அதிர்ச்சி அடைய, தனியாக கூட்டிக் கொண்டு சென்று இனிமேல் நைட்டி போட கூடாது என சொல்கிறார். ஏன் கண்ணா நன்றாக தான இருக்கிறது என ஐஸ்வர்யா சொல்ல, இந்த வீட்டில் யாரும் நைட்டி போடமாட்டாங்க அதனால் நீயும் போடாதே என கண்ணன் சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யா சும்மா காமெடி பண்ணாமல் கிளம்பு என சொல்கிறார்.
பின் தனம் அனைவருக்கும் சாப்பாடு வைக்க, என்ன நடக்கும் என பயந்து கண்ணன் இருக்கிறார். மீனாவும் தனம் எதாவது சொல்வாரா என காத்திருக்க, அவர் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார். மீனா அதை பார்த்து கடுப்பாகிறார். பின் ஐஸ்வர்யாவை மீனா தனியாக அழைத்து என்ன இவ்வளவு பெரிய காரியம் செய்திருக்காய் தெரியுமா இந்த வீட்டிற்கு சில ரூல்ஸ் இருக்கிறது. இந்த வீட்டில் யாரும் நைட்டி போடமாட்டாங்க நீ முதலில் சென்று மாற்று என சொல்கிறார்.
நீங்க சொல்வதை பார்த்தால் எனக்கு சிரிப்பாக வருகிறது என ஐஸ்வர்யா சொல்ல, அந்த பக்கம் தனம் வருகிறார். அவரிடம் மீனா நைட்டி பற்றி சொல்ல, ஆமாம் ஐஸ்வர்யா இங்கே ஆம்பளைங்க இருகாங்க நீ இப்படி செய்யலாமா என கேட்கிறார். என்ன அக்கா சொல்றீங்க நம்ம மாமா எல்லாம் எப்படி தப்பாக பார்ப்பார்கள் என கேட்கிறார். தனத்திடம் மீனா உசுப்பேத்திவிட, அவள் சின்ன பொண்ணு தான போக போக புரிந்து கொள்வாள் என தனம் சொல்கிறார்.
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு குறித்த முக்கிய அறிவிப்பு – பணிகள் தீவிரம்!
பின் தனம் மூர்த்தி அமர்ந்திருக்க, ஜீவாவும் கதிரும் வருகின்றனர். அப்போது தனம் இந்த வீடு நமக்கு போதவில்லை அதனால் இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு காசு வேண்டும் என தனம் கேட்கிறார். அப்போது கதிர் இந்த வீட்டை இடித்துவிட்டு வேற வீடு கட்டலாம் என சொல்ல. இது நம்ம அம்மா வாழ்ந்த இடம் இதை அப்படி செய்ய முடியாது என மூர்த்தி சொல்கிறார். எனக்கு மூன்று நாட்களாக இதே நினைப்பாக இருக்கிறது என தனம் சொல்ல, மூர்த்தி கடை வேலை முடிந்ததும் அதை பற்றி யோசிப்போம் என சொல்கிறார். இன்னும் 2 வாரத்தில் கடை வேலை முடிந்துவிடும் என கதிர் சொல்ல, நம்ம வீட்டில் அடுத்த விசேஷம் கடை திறப்பு விழா தான் என மூர்த்தி சொல்கிறார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்