உதவி செய்ய மறுக்கும் ஜெகா, கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு ஆதரவு தரும் முல்லையின் அப்பா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை அவரது அப்பாவிற்கு போன் செய்து கண்ணனுக்கு ஆதரவு தரும்படி கேட்கிறார். முதலில் மறுத்த அவர் பிறகு ஒப்புக் கொள்கிறார். கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீடு இல்லாமல் இருப்பதால் தனம் ஜெகாவிற்கு போன் செய்து கண்ணனுக்கு உதவி செய்யும்படி கேட்கிறார். ஆனால் நான் உதவி செய்தால் உன் அண்ணி என்னை உண்டு இல்லை என்று செய்துவிடுவாள். அவன் பண்ண தப்பிற்கு அவன் அனுபவிக்கட்டும் என்று சொல்லி போனை வைக்கிறார். தனம் என்ன செய்வதென்று தெரியாமல் கவலைப்படுகிறார்.
லட்சுமியை பாரதியிடம் விட்டு வரும் கண்ணம்மா, பிடிவாதத்தில் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
பின்னர் முல்லை தனது அப்பாவிற்கு போன் செய்து கண்ணனை தங்க வைக்க சொல்லி கேட்கிறார். உன் அம்மாவிற்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று அவர் பயப்பட, முல்லை கெஞ்சி கேட்டதும் சரி என்று சொல்கிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் எங்கே தங்குவது என்று திட்டமிட்டு கொண்டு இருக்கின்றனர். வேறு வழி எதுவும் இல்லை ஹோட்டலில் ரூம் எடுத்து தங்குவது மட்டுமே ஒரே வழி என்று சொல்ல, நான் மட்டும் தங்குவேன் ஐஸ்வர்யாவை கூட்டிக் கொண்டு போக ஒரு மாதிரி இருக்கு என்று சொல்கிறார்.
தமிழகத்தில் ஆக.,17 நிலவரப்படி 1,804 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
வேறு வழி எதுவும் இல்லை நீங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்தது குன்னக்குடி முழுவதும் தெரியும், உங்களுக்கு தான் இப்போ கல்யாணம் ஆகி விட்டதே அப்பறம் என்ன என்று கண்ணனின் நண்பன் சொல்கிறார். அப்போது அங்கே முல்லையின் அப்பா வருகிறார். கண்ணன் ஐஸ்வர்யாவால் குடும்பம் ரொம்ப கவலையில் உள்ளது. எதையும் நினைக்காமல் இப்படி செய்துவிட்டீர்கள் என்று சொல்கிறார். உங்களை நினைத்து அக்கா சாப்பிடமால் கவலைபட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்.
சரி கிளம்புங்கள் என்று கேட்க என் வீட்டிற்கு என்று சொன்னதும், கண்ணனுக்கு அழுகையே வந்துவிட்டது. மூன்று பேரும் வீட்டிற்கு செல்ல அங்கே முல்லையின் அம்மா பயங்கரமாக திட்டுகிறார். உன்னால தான் மல்லி இவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறாள் இவங்களை இங்க தங்க வைத்தால் அவ்வளவு தான் என்று சம்மதம் தெரிவிக்க மறுக்கிறார். உடனே ஐஸ்வர்யா கோவப்பட்டு கிளம்ப கண்ணன் தடுக்கிறார்.
உலகத்தின் கவனத்தை ஈர்த்த ஆப்கன் நிகழ்ச்சி தொகுப்பாளினி – தலிபான் அதிகாரியுடன் நேர்காணல்!
உனக்கு இவ்வளவு கோவம் வருகிறதா. உன்னை உன் சித்தி எப்படி வளர்த்தால், நல்ல இடத்தில் உன்னை கல்யாணம் செய்ய வேண்டும் என நினைத்தார் ஆனால் நீ இப்படி பண்ணிட்டியே என்று சொல்ல, மீண்டும் முல்லையின் அப்பா இருவரையும் உள்ளே போக சொல்கிறார். முல்லையின் அம்மா எதுவும் சொல்லாமல் இருக்கிறார். முல்லைக்கு போன் செய்து உன் அம்மா எதுவும் சொல்லவில்லை என்று சொல்கிறார். அதை கேட்டு முல்லை சந்தோசப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.