லட்சுமியை பாரதியிடம் விட்டு வரும் கண்ணம்மா, பிடிவாதத்தில் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
லட்சுமியை பாரதியிடம் விட்டு வரும் கண்ணம்மா, பிடிவாதத்தில் பாரதி - இன்றைய
லட்சுமியை பாரதியிடம் விட்டு வரும் கண்ணம்மா, பிடிவாதத்தில் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
லட்சுமியை பாரதியிடம் விட்டு வரும் கண்ணம்மா, பிடிவாதத்தில் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமியை கண்ணம்மாவுடன் அனுப்ப பாரதி மறுக்கிறார். கண்ணம்மாவும் உன் அம்மா அப்பா வரும் வரை இங்கேயே இரு என லட்சுமியை விட்டுவிட்டு செல்கிறார். வீட்டிற்கு சென்று லட்சுமியை விட்டு வந்ததை நினைத்து கவலைப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா கூட்டிட்டு போக வந்து பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே லட்சுமி வருகிறார். சமையல் அம்மா என அழைத்து ஓடி வர வாங்க கிளம்புவோம் என்று கிளம்புகின்றனர். அப்போது பாரதி லட்சுமியை தடுத்து அவர் பக்கம் இழுத்துக் கொள்கின்றார். லட்சுமி அம்மா அப்பா வரும் வரை நானே பத்திரமாக அவளை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். கண்ணம்மா எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்புகிறார். பாரதி இவ்வளவு நடந்தும் பெற்ற மகள் தான் என்று சொல்கிறாளா பாரு என நினைத்துக் கொள்கிறார்.

அதன் பின்னர் கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார். அங்கே லட்சுமியை விட்டு வந்ததை நினைத்து கவலைப்படுகிறார். ஹேமா தூங்கி கொண்டிருக்க, எழுந்த பின்னர் லட்சுமிக்கு உடம்பு சரி ஆகிவிட்டதா, அவள் எங்கே கூட்டிக் கொண்டு வரலையா என்று கேட்கிறாள். அவளை உன் அப்பா வைத்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார் என கண்ணம்மா சொன்னதும், அப்பா நல்லா பார்த்துக் கொள்வார் என ஹேமா சொல்கிறார்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மீண்டும் டெல்லி பயணம்? – புதிய தகவல்!

அஞ்சலி அகிலனும் பேசிக் கொண்டிருக்க, உனக்கு எதாவது கவலை இருந்தால் இப்பவே மனம் விட்டு பேசு என அகிலன் சொல்கிறார். அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மாசமாக இருக்கும் போது மனம் மாற்றம் அடிக்கடி வருவது சரி தான என்று சொல்கிறார். அன்னைக்கு ஏன் இது போல வந்தது என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை அதான் வெண்பா பார்த்து ஒன்னும் இல்லை என்று சொல்லிவிட்டார் என்று அஞ்சலி சமாளிக்கிறார்.

எதற்கும் சிட்டியில் சிறந்த டாக்டர் ஒருவரை பார்க்கலாம் என அகிலன் சொல்ல அஞ்சலி கோபப்படுகிறார். அன்னைக்கு தான வெண்பா பார்த்தாங்க என்று சொல்ல எனக்கு வெண்பா மீது நம்பிக்கை இல்லை என்று சொல்கிறார். அடிக்கடி என்னால செக் பண்ண முடியாது என கோபத்துடன் அஞ்சலி பேசுகிறார். இதற்கு ஏன் இவ்வளவு கோவப்படுகிறாய் என அகிலன் சொல்லவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அடுத்த 2 ஆண்டுகளில் எலக்ட்ரிக் கார் அறிமுகம் – ஓலா நிறுவனத்தின் புதிய திட்டம்

இரவு ஹேமா தூங்கிவிட, பெற்ற மகளை தன் மகள் தான் என சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோமே என நினைத்து கண்ணம்மா கவலைப்படுகிறார். அப்படி சொன்னால் அவள் முன்னாள் பாரதி என் நடத்தையை தப்பாக பேசுவார் இதை கேட்டு லட்சுமி மனசு வருத்தப்படும். அவள் எங்கேயோ போய் இல்லையே அது அவளின் அப்பா வீடு தான அவளுக்கு அங்கே இருக்க எல்லா உரிமையும் இருக்கு என மனதை தேத்திக்கொள்கிறார். அவர் பெற்ற மகளை என்னிடமும், நான் பெற்ற மகள் அவரிடமும் இருக்காங்க என்ன கொடுமை இதெல்லாம் கடவுளே என நினைத்து அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!