உலகத்தின் கவனத்தை ஈர்த்த ஆப்கன் நிகழ்ச்சி தொகுப்பாளினி – தலிபான் அதிகாரியுடன் நேர்காணல்!
உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி வந்துள்ளதால் அங்குள்ள பெண்களின் நிலை குறித்து கவலை படும் நிலையில், அங்கு ஒரு பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர் தலிபான் அதிகாரியுடன் நேர்காணல் செய்துள்ளார்.
தலிபான்களின் ஆட்சி:
கடந்த 20 வருடங்களாக ஆப்கனிஸ்தானில் தாலிபான்களுக்கும் அமெரிக்க படையினருக்கும் இடையிலான போர் நடந்து வருகிறது. தலிபான்களின் ஆட்சியை கலைத்து அங்கு மக்களாட்சி நடக்க வேண்டும் என்று அஷ்ரப் கானி என்பவரை ஆப்கானிஸ்தானின் அதிபராக அமெரிக்க ராணுவம் நியமித்தது. தொடர்ந்து ஆப்கனிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியை மக்கள் எதிர்த்து வந்தனர். காரணம் தலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு மக்கள் உடன்பட வில்லை.
இன்று முதல் மீண்டும் மால்கள் மூட உத்தரவு – மகாராஷ்டிரா அரசு!
தலிபான்களின் ஆட்சி நடந்த 1996 முதல் 2001 காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பல சட்டங்களையும் தடைகளையும் கொண்டு வந்தனர். அதன்படி, பெண்கள் முழுமையான பர்தா அணியாமல் வெளியில் செல்லக் கூடாது, உரிய ஆண் துணையின்றி வெளியில் செல்லக் கூடாது, 8 வயதிற்கு மேல் கல்வி கற்க கூடாது. மேலும், அவர்கள் நடக்கும் சத்தம் கூட கேட்கக் கூடாது என்பது போன்ற பல கொடுமையான சட்டங்களை கொண்டு வந்தனர். இந்த சட்டங்களை மீறும் பெண்களுக்கு பொது வெளியில் வைத்து மிக கொடுமையான முறையில் தண்டனைகள் விதிக்கப்படும். இது போன்ற கருத்துகளினால் தலிபான்களின் ஆட்சியை மக்கள் வெறுத்தனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது, தொடர்ந்து 20 வருடங்களாக தலிபான்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்க படையினர் நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதனால் அதிபரும் தப்பியோடி விட்டார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் தலிபான்கள் ஆக்கிரமித்து, தலைநகர் காபூலையும் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில், அங்குள்ள டோலோ நியூஸ் என்ற தொலைக்காட்சியில், பெண் தொகுப்பாளர் ஒருவர் தலிபான் ஊடக குழு உறுப்பினர் மவ்லவி அப்துல்ஹக் ஹேமாத் பெஹெஸ்தா அர்கண்டிடம் நேர்காணல் நடத்தியிருக்கிறார்.
நேர்காணலில், அவர் தலிபான்களுக்கு மக்கள் பயப்படுவதை கண்டு அவர் ஆச்சயப்படுவதாக கூறினார். மேலும், பெண்கள் விவகாரங்களில் தங்கள் நிலைப்பாடு இப்போது முன்பு போல் கடுமையாக இல்லை என்றும், பெண்களின் உரிமைகளை மதிப்பதாகவும், பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஹிஜாப் அணிந்தால் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த நேர்காணலை உலகம் மொத்தமும் வியந்து பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.